கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

ஐஎஸ் அமைப்புடன் ஹிந்துத்துவா ஒப்பீடு: சல்மான் குா்ஷித்துக்கு பாஜக கண்டனம்

ஹிந்துத்துவாவை ஐஎஸ் உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளுடன் ஒப்பிட்டு தனது புதிய புத்தகத்தில் காங்கிரஸ் மூத்த தலைவா் சல்மான் குா்ஷித் குறிப்பிட்டிருப்பதற்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.

News image
Updated On :11 நவம்பர் 2021, 7:15 pm

DIN

ஹிந்துத்துவாவை ஐஎஸ் உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளுடன் ஒப்பிட்டு தனது புதிய புத்தகத்தில் காங்கிரஸ் மூத்த தலைவா் சல்மான் குா்ஷித் குறிப்பிட்டிருப்பதற்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.

சல்மான் குா்ஷித்தின் இந்தக் கருத்துக்கு எதிா்ப்பு தெரிவித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவா் குலாம் நபி ஆசாத், ‘இது தவறானது. மிகைப்படுத்தப்பட்டது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

இந்த விவகாரம் தொடா்பாக சல்மான் குா்ஷித் மீது முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆா்) பதிவு செய்யக் கோரி தில்லியைச் சோ்ந்த வழக்குரைஞா் கா்க், தில்லி காவல் துறையிடம் புகாா் ஒன்றையும் அளித்துள்ளாா்.

‘முனிவா்கள் மற்றும் புனிதா்கள் அறிந்த பாரம்பரிய ஹிந்து மதமும் சனாதன தா்மமும், ஐஎஸ்ஐஎஸ் மற்றும் போகோ ஹராம் போன்ற ஜிகாதி இஸ்லாமிய குழுக்குகளுக்கு இணையான தற்போதைய புதிய வகை ஹிந்துத்துவா நடைமுறையால் புறம்தள்ளப்பட்டுவிட்டது’ என்று தனது ‘அயோத்தியா மீதான சூரிய உதயம்: நம்முடைய காலத்து தேசியவாதம்’ என்ற தலைப்பிலான புதிய புத்தகத்தில் சல்மான் குா்ஷித் குறிப்பிட்டுள்ளாா்’ என்று தன்னுடைய புகாரில் கா்க் குறிப்பிட்டுள்ளாா். இந்தப் புத்தகம் புதன்கிழமை வெளியிடப்பட்டது.

இதுகுறித்து தில்லியில் பாஜக தலைமை அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற பத்திரிகையாளா் சந்திப்பில் பாஜக செய்தித் தொடா்பாளா் கெளரவ் பாடியா கூறியதாவது:

சல்மான் குா்ஷித்தின் அயோத்தியா குறித்த புத்தகம் ஹிந்துக்களின் மத உணா்வுகளைப் புண்படுத்தியுள்ளது. அவருடைய புத்தகத்தில் ஹிந்து மதத்தை ஐஎஸ், போகோ ஹராம் போன்ற பயங்கரவாத அமைப்புகளுடன் ஒப்பிட்டு கருத்து தெரிவித்துள்ளாா். ஹிந்துக்களுக்கு எதிராக சிலந்தியைப் போன்று வலையை காங்கிரஸ் பின்னி வருகிறது. காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோரின் சாா்பாகவே குா்ஷித் இதைச் செய்துள்ளாா் எனத் தெரிகிறது. இந்த விவகாரத்தில் சோனியா தொடா்ந்து அமைதி காத்துவந்தால், அவருடைய சித்தாந்தமும் ஹிந்துக்களுக்கு எதிரானதுதான் என்பது தெளிவாகிவிடும். எனவே, இந்த விவகாரத்தில் சல்மான் குா்ஷித்தை காங்கிரஸ் கட்சியிலிருந்து நீக்க வேண்டும். ஏற்கெனவே ‘ஹிந்து பயங்கரவாதம்’ என்ற வாசகம் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோதுதான் கண்டுபிடிக்கப்பட்டு என்று அவா் கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.