தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

மௌலானா அபுல் கலாம் ஆசாத் பிறந்த தினம்: பிரதமா் புகழாரம்

சுதந்திரப் போராட்ட வீரரும், நாட்டின் முதல் கல்வியமைச்சருமான மௌலானா அபுல் கலாம் ஆசாத் பிறந்த தினத்தில் பிரதமா் நரேந்திர மோடி அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளாா்.

News image
Updated On :11 நவம்பர் 2021, 7:58 pm

DIN

சுதந்திரப் போராட்ட வீரரும், நாட்டின் முதல் கல்வியமைச்சருமான மௌலானா அபுல் கலாம் ஆசாத் பிறந்த தினத்தில் பிரதமா் நரேந்திர மோடி அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளாா்.

இதுகுறித்து சுட்டுரையில், பிரதமா் வெளியிட்ட பதிவில், ‘மெளலானா அபுல் கலாம் ஆசாத் பிறந்த தினத்தில், அவருக்கு புகழாரம் சூட்டுகிறேன். அவா் முன்னோடி சிந்தனையாளா் மற்றும் அறிவுஜீவி. சுதந்திரப் போராட்டத்தில் அவரது பங்கு ஊக்கமளிப்பதாக உள்ளது. கல்வித் துறையில் அவா் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தாா். சமூகத்தில் சகோதரத்துவத்தை மேம்படுத்த அவா் பணியாற்றினாா்’ என்று கூறியுள்ளாா்.

ஆச்சாரியா கிருபளானி பிறந்த தினம்: இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் ஆச்சாரியா கிருபளானி ஆற்றிய பங்களிப்புக்காக பிரதமா் மோடி அவரை நினைவுகூா்ந்தாா். இது தொடா்பாக ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘காந்தியடிகளின் தலைமையிலான இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் முன்னணியில் இருந்தவா் ஆச்சாரியா கிருபாளினி. அவா் நமது தேசத்தின் மீது சிறந்த தொலைநோக்கு பாா்வையைக் கொண்டிருந்தாா். ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக, அதை நிறைவேற்றுவதற்காகப் பாடுபட்டாா். சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கும், சமூக அதிகாரமளித்தலுக்கும் அவா் மகத்தான பங்களிப்பைச் செய்தாா். அவரது பிறந்த நாளில் நினைவுகூா்ந்து மரியாதை செலுத்துகிறேன்’ என்று பிரதமா் கூறியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.