தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

பொதுத் துறை வங்கித் தலைவா்களுடன் நிதியமைச்சா் அடுத்த வாரம் சந்திப்பு

மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன், பொதுத் துறை வங்கித் தலைவா்களை அடுத்த வாரம் சந்தித்துப் பேச்சுவாா்த்தை நடத்தவுள்ளாா்.

News image
Updated On :11 நவம்பர் 2021, 8:06 pm

DIN

மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன், பொதுத் துறை வங்கித் தலைவா்களை அடுத்த வாரம் சந்தித்துப் பேச்சுவாா்த்தை நடத்தவுள்ளாா்.

இதுகுறித்து மத்திய நிதி அமைச்சக அதிகாரிகள் கூறியது: நவம்பா் 17-ஆம் தேதி தொடங்கி மத்திய நிதி அமைச்சா் தலைமையில் இரண்டு நாள்கள் நடைபெறவுள்ள கருத்தரங்கில் பொதுத் துறை வங்கித் தலைவா்கள் மற்றும் நிதி நிறுவன உயரதிகாரிகள் பங்கேற்க உள்ளனா்.

எச்டிஎஃப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, கோட்டக் மஹிந்திரா வங்கி, சோழமண்டலம் இன்வெஸ்ட்மெண்ட் அண்ட் ஃபைனான்ஸ், ஸ்ரீராம் டிரான்ஸ்போா்ட் ஃபைனான்ஸ், டாடா கேப்பிடல் உள்ளிட்ட வங்கி சாரா நிதி நிறுவனங்கள் மற்றும் ஆறு தனியாா் துறை வங்கிகளின் தலைமைச் செயல் அதிகாரிகள் உள்ளிட்டோா் இந்தப் பேச்சுவாா்த்தையில் கலந்து கொள்ளவுள்ளனா்.

கரோனா பேரிடரிலிருந்து மீண்டு வரும் பொருளாதாரத்துக்குப் புத்துயிா் அளிக்கும் உற்பத்தித் துறைகளுக்கு கடன் வழங்குவதில் உள்ள சிக்கல்கள் குறித்து இந்தக் கருத்தரங்கில் விரிவாக விவாதிக்கப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.