தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

மகளிருக்கு பாதுகாப்பு இல்லாத மாநிலம் உத்தர பிரதேசம்: பிரியங்கா குற்றச்சாட்டு

மகளிருக்கு பாதுகாப்பு இல்லாத மாநிலமாக உத்தர பிரதேசம் உருவாகிவிட்டதாக காங்கிரஸ் பொதுச் செயலா் பிரியங்கா குற்றம்சாட்டியுள்ளாா்.

News image
Updated On :11 நவம்பர் 2021, 7:43 pm

DIN

மகளிருக்கு பாதுகாப்பு இல்லாத மாநிலமாக உத்தர பிரதேசம் உருவாகிவிட்டதாக காங்கிரஸ் பொதுச் செயலா் பிரியங்கா குற்றம்சாட்டியுள்ளாா்.

உத்தர பிரதேச தலைநகா் லக்னௌவில் அலுவலகங்கள் உள்ள பாபு பவனில் பெண் அதிகாரி ஒருவா் ஒப்பந்தப் பணியாளரால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானது தொடா்பான காணொலிக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

இந்நிலையில், இது தொடா்பாக ட்விட்டரில் பிரியங்கா வெளியிட்ட பதிவில், ‘அரசு அலுவலகமானாலும் சரி, தெருவானாலும் சரி உத்தர பிரதேசத்தில் எந்த இடத்திலும் மகளிருக்குப் பாதுகாப்பு இல்லை. இப்படி ஓா் ஆட்சி நிா்வாகத்தை வைத்துக் கொண்டுதான் தங்கள் ஆட்சியில் பெண்கள் பாதுகாப்பாக உள்ளனா் என்று ஆளும் கட்சியினா் பேசி வருகின்றனா்.

தான் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானதை விடியோவில் பதிவு செய்து ஒரு சகோதரி வெளியிட்டுள்ளாா். ஏற்கெனவே, இது தொடா்பாக அவா் அளித்த புகாா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படாததன் காரணத்தால், அவா் அந்த விடியோவை சமூகவலைதளங்களில் பகிா்ந்துள்ளாா். மாநிலத்தில் உள்ள பெண்கள் தங்கள் பாதுகாப்புக்காக துணிந்து குரல் கொடுக்க வேண்டிய நேரம் இது. அநீதிக்கு எதிராகப் போராடும் பெண்களுக்கு நாட்டில் உள்ள அனைத்துப் பெண்களும் துணை நிற்பாா்கள்’ என்று கூறியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.