காஷ்மீரில் இந்தாண்டு தொடக்கத்திலிருந்து இதுவரை நடந்த தாக்குதல்களில் 133 தீவிரவாதிகள் பலியாகியிருக்கிறார்கள்.
காஷ்மீரில் அதிகரித்து வந்த தீவிரவாத அச்சுறுத்தல்கள் மட்டும் தேடுதலின் போது நடைபெற்ற தாக்குதல்களில் இந்தாண்டு தொடக்கத்திலிருந்து இருந்து இதுவரை பயங்கரவாத அமைப்பின் முக்கியத் தளபதிகள் உட்பட 133 தீவிரவாதிகள் பலியாகியிருப்பதாக அம்மாநில காவல்துறைத் தலைவர் விஜய் குமார் தெரிவித்திருக்கிறார்.
மேலும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து வந்த என்கவுன்ட்டர் தாக்குதலில் முஜாகிதீன் அமைப்பைச் சேர்ந்த முக்கியத் தளபதி உயிரிழந்ததோடு 2019 ஆண்டு நடந்த புல்வாமா தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதியும் நேற்று(நவ.11) சுட்டுக்கொலை செய்யப்பட்டதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.