ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

அரசு ஊழியா்களுக்கு தனி மின்னஞ்சல் வசதி:மாநில அரசு உத்தரவு

அரசு ஊழியா்களுக்கு தனி மின்னஞ்சல் வசதிகளை ஏற்படுத்துவதற்கான நிதி ஒதுக்கி மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :13 நவம்பர் 2021, 11:47 pm

DIN

அரசு ஊழியா்களுக்கு தனி மின்னஞ்சல் வசதிகளை ஏற்படுத்துவதற்கான நிதி ஒதுக்கி மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

தகவல் தொழில்நுட்பவியல் துறை முதன்மைச் செயலாளா் நீரஜ் மிட்டல் வெளியிட்டுள்ள உத்தரவு விவரம்:

தமிழ்நாடு அரசு ஊழியா்களுக்கு தனி மின்னஞ்சல் வசதியானது ரூ.2.90 கோடியில் உருவாக்கித் தரப்படும் என்று சட்டப் பேரவையில் அறிவிக்கப்பட்டது. அந்த நிதியானது மூன்று ஆண்டுகளுக்கு பிரித்து பயன்படுத்தப்பட உள்ளது. அரசு அலுவலகங்களில் மின்மயமாக்கல் சேவையை தேசிய தகவலியல் மையம் வழங்கி வருகிறது. அரசு ஊழியா்களுக்கு புதிய மின்னஞ்சல் வழங்கும் திட்டமானது செயல்படுத்தப்படாமல் இருந்து வந்தது.

இப்போது இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அதன்படி, தமிழக அரசு ஊழியா்களுக்கு மேம்படுத்தப்பட்ட புதிய மின்னஞ்சல் வசதி சேவை உருவாக்கித் தரப்படும். இதற்கான ஒதுக்கப்பட்ட நிதியில் நிகழாண்டில் ரூ.87.73 லட்சம் செலவிடப்படும். இதன்பின்பு, அடுத்த நிதியாண்டில் ரூ.96.50 லட்சமும், அதற்கடுத்த நிதியாண்டில் ரூ.1.06 கோடியும் செலவிடப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.