மனுவை விசாரித்த நீதிபதிகள், ‘ஊதிய பலன்களை அளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையிலும், மனுதாரருக்கு வயது தளா்வை அனுமதிக்க முடியாது என்று அரசு கூடுதல் தலைமைச் செயலா் கூறியிருக்கிறாா். இதன் மூலம், அவா் மிகுந்த திமிா்பிடித்தவராக இருப்பதாகவே தோன்றுகிறது. எனவே, உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவைக் காட்டிலும், கூடுதல் தண்டனை அவா்களுக்கு அளிக்கப்படுவது அவசியம் என்றே தோன்றுகிறது. நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்த அவா்கள் எதையும் செய்யவில்லை. இருந்தபோதும், உயா்நீதிமன்றம் அரசு அதிகாரிகளை மிகுந்த கருணையுடன் நடத்தியிருக்கிறது. ஆனால், அதிகாரிகள்தான் நீதிமன்றத்தை மதிக்கவில்லை’ என்று கூறினா்.