வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

மேஜைக்கு ஒரு மாணவர்: மேற்கு வங்கத்தில் பள்ளிகள் திறப்பு

மேற்குவங்கத்தில் 9 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.

News image
Updated On :16 நவம்பர் 2021, 5:42 am

DIN

மேற்குவங்கத்தில் 9 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.

கரோனா பொதுமுடக்கம் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில், 20 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.

பெற்றோர்கள் விருப்பத்தின் அடிப்படையில் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பலாம் என்றும், பள்ளிகள் கட்டாயப்படுத்தக் கூடாது என்றும் அரசு அறிவுறுத்தியுள்ளது.

இதனிடையே தலைநகரான கொல்கத்தாவில் உள்ள பள்ளிகளுக்கு மாணவர்கள் வருகை புரிந்தனர். சமூக இடைவெளியுடன் ஆசிரியர்கள் அவர்களை உற்சாகமாக வரவேற்றனர்.

பள்ளி வாயில்களில் பள்ளி மாணவர்களுக்காக கிருமிநாசினி வைக்கப்பட்டுள்ளது. முகக்கவசம் அணிந்து வருவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சமூக இடைவெளியுடன் வகுப்புகள் நடத்தப்படுகிறது.

கரோனா வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உள்பட்டு சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் ஒரு மேஜைக்கு ஒரு மாணவர் மட்டுமே அமரவைக்கப்படுகின்றனர். இரு பிரிவுகளாக வகுப்பு மாணவர்கள் பிரிக்கப்பட்டு பாடங்கள் நடத்தப்படுகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.