புதிய வகை கரோனா: பிரதமர் மோடி ஆலோசனை
தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட புதிய வகை கரோனா வைரஸ் குறித்து பிரதமர் மோடி உயர்மட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.


தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட புதிய வகை கரோனா வைரஸ் குறித்து பிரதமர் மோடி உயர்மட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்..
தென்னாப்பிரிக்காவில் புதிய வகை கரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. ஒமிக்ரான் எனப் பெயரிடப்பட்ட இந்த புதிய வகை கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க பல்வேறு உலக நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தி வருகின்றன.
இந்நிலையில் இந்தியாவில் புதிய வகை கரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் ஒமிக்ரான் வகை கரோனா வைரஸின் தன்மைகள், தடுப்பூசிகள் உள்ளிட்டவைகள் குறித்து உயர்மட்ட அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...