காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

வாழ்வை மாற்றிய 15 வினாடி சிரிப்பு! பல மீம்களில் டீ கப்புடன் சிரிக்கும் அந்த சிறுவன்!

பல மீம்களின் நிறைவில் டீ கப்புடன் சிரிக்கும் அந்த சிறுவனைப் பற்றிய தகவல்..

News image
Updated On :5 மார்ச் 2026, 9:25 am

இணையதளச் செய்திப் பிரிவு

15 வினாடி சிரிப்பு ஒருவரது வாழ்க்கையையே மாற்றும் என்று சொன்னால் நம்ப முடியாது, ஆனால், இந்த டிஜிட்டல் உலகில் எதுவும் நடக்கலாம்.

அப்படித்தான், தன்னுடைய முதலாளி சொன்ன ஒரு நகைச்சுவையை, கேட்டுக் கொண்டிருந்த அருண் குமார் என்ற 15 வயது சிறுவன், தன்னை மறந்து சிரித்த 15 வினாடி சிரிப்பு அவனது வாழ்க்கையையே புரட்டிப்போட்டிருக்கிறது நல்ல முறையில். இவர் ஆந்திரத்தைச் சேர்ந்தவர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது 18 வயதாகும் அருண் குமாரின் அந்த சிரிப்பை நாமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட முறைகள் பார்த்து சிரித்திருப்போம். அதாவது ஒவ்வொரு நகைச்சுவை மீம்களின் இறுதியிலும், அருண் குமாரின் சிரிப்பு விடியோதான் நிறைவாக இருக்கும்.

ஒரு சில வினாடி சிரிப்பினால், எதையும் மாற்ற முடியும் என்று நிரூபித்திருக்கிறது அருண் குமாரின் வாழ்க்கை. இன்று அருண் குமாரைத் தெரியாதவர்களே இருக்க முடியாது. அவர் யார்? எங்கிருக்கிறார், என்ன பெயர் என்று வேண்டுமானால் பலருக்கும் தெரிந்திருக்காது. ஆனால், அவரது அந்த சிரிப்பு.. தெரியாதவர்கள் இருக்க முடியாது.

அருண் குமார் தன்னுடைய 10வது வயதில், குடும்ப வறுமை காரணமாக நான்காம் வகுப்பிலேயே பள்ளியை பாதியில் நிறுத்திவிட்டு வேலைத் தேடிக் கொண்டிருந்த போது, லாரி ஓட்டுநர் நேரு என்பவர், அருண் குமாரை தன்னுடைய உதவியாளராக வேலைக்கு அமர்த்திக் கொண்டார்.

ஒருநாள், மாலை வேளையில், தேநீர் இடைவேளையின்போது, நேரு சொன்ன ஒரு நகைச்சுவையைக் கேட்டுக் கொண்டிருந்த அருண் குமார் மனம் விட்டு சிரித்ததை நேரு விடியோ எடுத்து அதனை சமூக வலைத்தளத்தில் பதிவிட, அது யாரும் எதிர்பாராத வகையில் வைரலானது. ஒரு விடியோ வைரலாகும். அதனை பலரும் பார்ப்பார்கள். ஒரு கோடி பார்வையாளர்கள் என்று சொல்வார்கள் அவ்வளவுதான். ஆனால், அருண் குமார் சிரிப்போ வேறு வகையில் சாதனை படைத்தது. பலரும் அந்த சிரிப்பை தங்களது மீம்ஸ்களின் இறுதியில் சேர்க்க ஆரம்பித்தனர். அது முடிவு பெறாமல் இன்றுவரை தொடர்கதையாக உள்ளது.

அப்போதுதான் அருண் பற்றிய தகவல்கள் இணையத்தில் வெளியாகத் தொடங்கியது. அருணை பணிக்கு அமர்த்திய நேருவும், குடும்ப வறுமையால் கல்லூரிப் படிப்பை பாதியில் விட்டுவிட்டு லாரி ஓட்டும் வேலைக்கு வந்தவர். தன்னைப் போல அருண் ஆகிவிடக் கூடாது என்பதற்காக அவனுக்கு புத்தகம் வாங்கிக் கொடுத்து படிக்க வைத்து 10ஆம் வகுப்புத் தேர்வெழுத வைத்தார்.

லாரி ஓட்டுநர் அறையே ஒரு சிறிய வகுப்பறையாக மாறியது. அருணுக்கு பாடங்களை சொல்லிக் கொடுத்தார். கடைசியாக அருண் பத்தாவது பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்று, படிப்பை பாதியில் விட்ட அருண் என்ற அடையாளத்தை மாற்றி 10வது படித்த அருண் என மாறியிருக்கிறது.

ஒரு அதிர்ஷ்டம் எப்போது வேண்டுமானாலும் கதவைத் தட்டலாம், அதனைத் திறந்து சாதனை படைக்க அனைவரும் தயாராக இருக்க வேண்டும் என்பதைத்தான் இந்த வாழ்க்கைப் பாடம் கற்றுத் தருவதாக பலரும் சமூக வலைத்தளங்களில் கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள்.

summary

Information about the boy who smiles with a cup of tea at the end of many memes..

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.