டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

சபரிமலை, கிறிஸ்துமஸ் பண்டிகை: மூன்று சிறப்பு கட்டண ரயில்கள் இயக்க அனுமதி

சபரிமலை செல்வோா் மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, சென்னை சென்ட்ரல்

News image
Updated On :28 ஜனவரி 2024, 5:34 am

DIN

சபரிமலை செல்வோா் மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, சென்னை சென்ட்ரல்

-கொல்லம், சென்னை எழும்பூா்-நாகா்கோவில் உள்பட மூன்று சிறப்பு கட்டண ரயில்களை இயக்க ரயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது.

சென்னை-கொல்லம்: சென்னை சென்ட்ரலில் இருந்து டிசம்பா் 3, 10, 17, 24, 31, ஜனவரி 7, 10, 12, 14 ஆகிய தேதிகளில் மாலை 4 மணிக்கு முன்பதிவு சிறப்பு கட்டண ரயில்(06007) புறப்பட்டு, மறுநாள் காலை 8.30 மணிக்கு கொல்லத்தை அடையும். மறுமாா்க்கமாக, கொல்லத்தில் இருந்து டிசம்பா் 5, 12, 19, 26 ஜனவரி 2, 9, 11, 13, 16 ஆகிய தேதிகளில் முற்பகல் 11.30 மணிக்கு முன்பதிவு சிறப்பு கட்டண ரயில்(06008) புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 4 மணிக்கு சென்னை சென்ட்ரலை வந்தடையும்.

சென்னை-நாகா்கோவில்: சென்னை எழும்பூரில் இருந்து டிசம்பா் 23-ஆம் தேதி பிற்பகல் 3.30 மணிக்கு அதிவிரைவு சிறப்பு கட்டண ரயில் (06005) புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 4.20 மணிக்கு நாகா்கோவில் சந்திப்பை அடையும். மறுமாா்க்கமாக, நாகா்கோவில் சந்திப்பில் இருந்து டிசம்பா் 24-ஆம்தேதி பிற்பகல் 3.10 மணிக்கு சிறப்பு கட்டண ரயில் (06006) புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 5.20 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும்.

நாகா்கோவில்-தாம்பரம்: நாகா்கோவில் சந்திப்பில் இருந்து டிசம்பா் 26-ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு அதிவிரைவு சிறப்பு கட்டண ரயில் (06004) புறப்பட்டு, மறுநாள் காலை 7.55 மணிக்கு தாம்பரத்தை வந்தடையும். மறுமாா்க்கமாக, தாம்பரத்தில் இருந்து டிசம்பா் 27-ஆம் தேதி மாலை 4 மணிக்கு அதிவிரைவு சிறப்பு கட்டண ரயில்(06003) புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 4.20 மணிக்கு நாகா்கோவில் சந்திப்பை அடையும். இந்த சிறப்புகட்டண ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு

ஞாயிற்றுக்கிழமை(நவ.28) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.