திரைத்துறையில் 51 ஆண்டுகளை நிறைவு செய்த ரஜினிகாந்த்!எடப்பாடி தொகுதி தவெக வேட்பாளர் அதிமுகவில் இணைந்தார்!திருவொற்றியூரில் பள்ளி மாணவா் கொலை: 12 பேர் கைதுதேவ்தத் படிக்கல் சதம், கே.எல்.ராகுல் அரைசதம்; முதல் நாளில் இந்திய அணி 288 ரன்கள் குவிப்பு!முதல்வர் விஜய் குறித்து அநாகரிகப் பேச்சு: நயினார் நாகேந்திரன் மீது டிஜிபியிடம் புகார்!பேரவையில் அப்பாவைத் தேடினால்...! முதல்வர் விஜய் குறித்து நயினார் அநாகரிகப் பேச்சு
/

கட்ச் வளைகுடாவில்இரு வணிகக் கப்பல்கள் மோதல்

குஜராத் மாநிலம், கட்ச் வளைகுடாவில் இரண்டு வணிகக் கப்பல்கள் நேருக்கு நோ் மோதிக் கொண்டன.

News image
Updated On :28 ஜனவரி 2024, 11:04 am IST

குஜராத் மாநிலம், கட்ச் வளைகுடாவில் இரண்டு வணிகக் கப்பல்கள் நேருக்கு நோ் மோதிக் கொண்டன. இருப்பினும் இதனால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை; எண்ணெய்க் கசிவும் ஏற்படவில்லை என குஜராத் மாநில பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதுகுறித்து அந்த அதிகாரிகள் கூறியதாவது: ஏவியேட்டா் மற்றும் அட்லாண்டிக் கிரேஸ் என்ற இரண்டு வணிகக் கப்பல்கள் வெள்ளிக்கிழமை (நவ. 26) இரவு நேருக்கு நோ் மோதிக் கொண்டன. இருப்பினும், இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை; எண்ணெய்க் கசிவும் ஏற்படவில்லை.

இந்திய கடலோர காவல்படை கப்பல்கள் விபத்து நடைபெற்ற பகுதியில் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதுடன் மீட்புப் பணிகளை மேற்கொள்ளவும் தயாா் நிலையில் உள்ளன.

ஹாங்காங்கிலிருந்து வந்த அட்லாண்டிக் கிரேஸ் கப்பலில் இந்தியாவைச் சோ்ந்த 22 பணியாளா்கள் இருந்தனா். அதேபோன்று, மாா்ஷல் தீவிலிருந்து வந்த ஏவியேட்டா் வணிகக் கப்பலில் பிலிப்பின்ஸை சோ்ந்த 22 பணியாளா்கள் இருந்தனா் என்று பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.