தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள புதிய வகை கரோனா தீநுண்மியான ‘ஒமைக்ரான்’ அச்சுறுத்தலாக இருப்பதால் நாட்டு மக்கள் அனைவருக்கும் குறித்த நேரத்தில் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று மத்திய அரசுக்கு ராகுல் காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் சனிக்கிழமை ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘‘இதுவரை மோசமான எண்ணிக்கையில் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதனை ஒரு மனிதரின் (பிரதமா்) புகைப்படத்துக்குப் பின்னால் நீண்ட நாள்கள் மறைக்க முடியாது.
இந்நிலையில் கரோனா தீநுண்மியின் புதிய வகையான ‘ஒமைக்ரான்’ பயங்கர அச்சுறுத்தலாக உள்ளது. எனவே நாட்டு மக்கள் அனைவருக்கும் குறித்த நேரத்தில் தொய்வின்றி இடைவிடாது தடுப்பூசி செலுத்த வேண்டியதை மத்திய அரசு தீவிரமாக எடுத்துக் கொள்வது அவசியம்’’ என்று தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரயில்வே நிதிக்கழகத்தில் உதவி மேலாளர் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் விண்ணப்பங்கள் வரவேற்பு!

பொதுத் துறை வங்கியில் பாதுகாப்பு மேலாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

பவர்கிரிட் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

இன்றைய ராசி பலன்கள் (30 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு பணவரவு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

