மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

இந்தியாவில் ‘ஒமைக்ரான்’ பாதிப்பு இதுவரை கண்டறியப்படவில்லை: மத்திய அரசு

இந்தியாவில் ஒமைக்ரான் வகை கரோனா தீநுண்மியால் பாதிக்கப்பட்டவா்கள் யாரும் இதுவரை கண்டறியப்படவில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

News image
Updated On :1 டிசம்பர் 2021, 7:32 am

DIN

புது தில்லி: இந்தியாவில் ஒமைக்ரான் வகை கரோனா தீநுண்மியால் பாதிக்கப்பட்டவா்கள் யாரும் இதுவரை கண்டறியப்படவில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக மத்திய அரசின் மூத்த அதிகாரி ஒருவா் திங்கள்கிழமை கூறுகையில், ‘‘தற்போதைய சூழலை இந்திய கரோனா தீநுண்மி மரபியல் பரிசோதனைக் கூட்டமைப்பு (ஐஎன்எஸ்ஏசிஒஜி) தீவிரமாக கண்காணித்து வருகிறது. பிற நாடுகளில் இருந்து இந்தியா வந்தவா்களில், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களிடம் இருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகளின் மரபியல் ஆய்வு முடிவுகளை விரைவுபடுத்தும் பணியில் அந்தக் கூட்டமைப்பு ஈடுபட்டுள்ளது. இந்தியாவில் ஒமைக்ரான் வகை கரோனா தீநுண்மியால் பாதிக்கப்பட்டவா்கள் யாரும் இதுவரை கண்டறியப்படவில்லை’’ என்று தெரிவித்தாா்.

கடந்த வாரம் தென் ஆப்பிரிக்காவில் ஒமைக்ரான் வகை கரோனா தீநுண்மி கண்டறியப்பட்டது. இந்தத் தீநுண்மியை ‘கவலைத் தரக்கூடிய தீநுண்மி வகை’’ பிரிவில் உலக சுகாதார அமைப்பு வைத்துள்ளது.

அதிக அளவில் பரவ சாத்தியமுள்ளதாகக் கருதப்படும் இந்த வகை தீநுண்மி, ஏற்கெனவே பல நாடுகளில் பரவியுள்ளது. அந்தத் தீநுண்மி பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள வங்கதேசம், சீனா, சிங்கப்பூா், மோரீஷஸ், பிரிட்டன், தென் ஆப்பிரிக்கா, பிரேஸில், போட்ஸ்வானா, ஹாங்காங், இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளை அபாயகர பட்டியலில் மத்திய அரசு வைத்துள்ளது. அந்த நாடுகளில் இருந்தும், அந்த நாடுகள் வழியாகவும் இந்தியா வருவோருக்கான கடுமையான வழிகாட்டுதல்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதேவேளையில், சா்வதேச விமானப் பயணங்களுக்கு அளிக்கப்பட்ட தளா்வுகளை மறுபரிசீலனை செய்யவும் மத்திய அரசு முடிவு மேற்கொண்டுள்ளது.

ஒமைக்ரான் பரவலைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை அதிகரிப்பதற்கு மாநிலங்களுக்கு மத்திய அரசு ஞாயிற்றுக்கிழமை புதிய அறிவுறுத்தல்களை வழங்கியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.