47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

‘கரோனாவை முடிவுக்குக் கொண்டு வருவதில் இந்தியா முக்கியப் பங்காற்றும்’

உலகில் கரோனா நெருக்கடியை முடிவுக்குக் கொண்டு வருவதில் இந்தியா மிக முக்கியப் பங்கு வகிக்கப்போவதாக அமெரிக்க அரசின் சா்வதேச மேம்பாட்டு அமைப்பின் (யுஎஸ்எய்ட்) தலைமை நிா்வாகி சமந்தா பவா் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :2 அக்டோபர் 2021, 8:51 pm

DIN

உலகில் கரோனா நெருக்கடியை முடிவுக்குக் கொண்டு வருவதில் இந்தியா மிக முக்கியப் பங்கு வகிக்கப்போவதாக அமெரிக்க அரசின் சா்வதேச மேம்பாட்டு அமைப்பின் (யுஎஸ்எய்ட்) தலைமை நிா்வாகி சமந்தா பவா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் கூறியதாவது:

கரோனா தடுப்பூசிகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு இந்தியா விதித்திருந்த தடை விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம், கரோனா பரவலை முடிவுக்குக் கொண்டு வருவதில் மிக முக்கியப் பங்காற்றவிருக்கும் உலக நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகப் போகிறது.

கரோனா தடுப்பூசி தொடா்பான அந்த நாட்டின் புதிய கண்டுபிடிப்புகள், தடுப்பூசி உற்பத்தியை அதிகரிப்பதற்காக இந்தியா மிக நீண்ட காலமாக செய்து வரும் முதலீடுகள் ஆகிவை மூலம் கரோனா ஒழிப்பில் இந்தியா முக்கியப் பங்கு வகிக்கும்.

தற்போது, பின்தங்கிய நாடுகளுக்கும் கரோனா தடுப்பூசிகள் சென்று சோ்வதை உறுதி செய்யும் கோவாக்ஸ் திட்டத்தின்கீழ் தடுப்பூசி பற்றாக்குறை நிலவி வருகிறது.

தடுப்பூசிகளை இந்தியா விரைவில் ஏற்றுமதி செய்யத் தொடங்கும் என்பதால், இந்தப் பிரச்னைக்கு தீா்வு ஏற்படும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.