கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட எண்ணிக்கை 90 கோடியை கடந்தது
இந்தியாவில் செலுத்தப்பட்டுள்ள கரோனா தடுப்பூசி டோஸ்களின் மொத்த எண்ணிக்கை சனிக்கிழமை 90 கோடியைக் கடந்தது என்று மத்திய சுகதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா தனது சுட்டுரையில் தெரிவித்துள்ளாா்.










