இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்மனதின் குரல் நிகழ்ச்சி: வெய்யிலில் இருந்து மக்கள் தற்காத்துக் கொள்ள பிரதமர் மோடி அறிவுறுத்தல்!சென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான கொள்ளை லாபத் தடுப்பு வரியில் தளர்வு: ஜூன் 1 முதல் அமல்தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புஇரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்!
/

இந்திய, சீன எல்லை பிரச்னைக்கு 13ஆம் கட்ட பேச்சுவார்த்தை தீர்வளிக்குமா?

13ஆம் கட்ட பேச்சுவார்த்தை மூன்று முதல் நான்கு நாள்களில் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. அருணாச்சலப் பிரதேசத்தில் சீன ராணுவம் ஊடுருவிய நிலையில், இந்த பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :8 அக்டோபர் 2021, 3:05 pm IST

கிழக்கு லடாக்கில் இந்தியா-சீனா இடையே நடந்த மோதலைத் தொடர்ந்து, கடந்தாண்டு மே மாதத்திலிருந்து படை குவிக்கப்பட்டு பதற்றம் நீடித்துவந்தது. படைகளைத் திரும்பப்பெற்று அமைதியை நிலைநாட்ட படைத்தளபதிகள் தலைமையிலான ராணுவ ரீதியான பேச்சுவார்த்தையில் இரு தரப்பும் கலந்து கொண்டது.

கடந்த பிப்ரவரியில் நடந்த 10ஆம் கட்ட பேச்சுவார்த்தையின் பலனாக கிழக்கு லடாக்கின் பாங்காங் சோ ஏரியின் வடக்கு, தெற்கு கரைகளிலிருந்து இரு நாடுகளின் படைகள் திரும்பப்பெறப்பட்டன. இதையடுத்து, பல மாதங்களாக நீடித்துவந்த பதற்றம் தணிந்தது.

இதையடுத்து, ஏப்ரல் 9ஆம் தேதி லடாக் எல்லையில் மீதமுள்ள படைகளை விலக்கிக்கொள்வது தொடர்பாக இருநாட்டு ராணுவ உயர் அலுவலர்கள் பங்கேற்கும் 11ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில், லேயை அடிப்படையாகக் கொண்டு செயல்பட்டுவரும் 14ஆவது படைப்பிரிவின் கமாண்டர் லெப்டினென்ட் ஜெனரல் பி.ஜி.கே. மேனன் தலைமையிலான குழுவினர் இந்தியா சார்பில் பங்கேற்கிறார்கள்.

இச்சந்திப்பில் இந்திய சீன எல்லைப்பகுதியில் நிலவும் பிரச்சினை குறித்தும், கோக்ரா, ஹாட்ஸ்பிரிங்ஸ், தெபாங் சமவெளிப்பகுதி போன்ற இடங்களிலிருந்து படைகளை விலக்குவது குறித்து விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, நடைபெற்ற 11 மற்றும் 12 கட்ட பேச்சுவார்த்தைகள் சுமூகமாக நடைபெற்றன.

இந்நிலையில், 13ஆம் கட்ட பேச்சுவார்த்தை மூன்று முதல் நான்கு நாள்களில் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. அருணாச்சலப் பிரதேசத்தில் சீன ராணுவம் ஊடுருவிய நிலையில், இந்த பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. கிழக்கு லடாக்கில் நிலவும் பிரச்னையை தீர்க்கும் வகையிலும் ஹாட் ஸ்பிரிங்கில் படைகளை விலக்கி கொள்வதில் இரு தரப்புக்கும் ஒரு மித்த கருத்து ஏற்படுத்தும் நோக்கிலும் இந்த பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.

இந்த வாரம், ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு ராணுவ தளபதி முகுந்த் நரவனே அளித்த பேட்டியில், அக்டோபர் இரண்டாவது வாரம் பேச்சுவார்த்தை நடைபெறும் எனக் குறிப்பிட்டிருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.