இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்மனதின் குரல் நிகழ்ச்சி: வெய்யிலில் இருந்து மக்கள் தற்காத்துக் கொள்ள பிரதமர் மோடி அறிவுறுத்தல்!சென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான கொள்ளை லாபத் தடுப்பு வரியில் தளர்வு: ஜூன் 1 முதல் அமல்தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புஇரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்!
/

ரஷிய எரிசக்தி மையங்கள் மீது உக்ரைன் தாக்குதல்!

ரஷிய எரிசக்தி மையங்கள் மீது உக்ரைன் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகின்றது.

News image

ரஷியாவிற்கு எதிராக டிரோன்களை தயார்படுத்தும் உக்ரைன் வீரர்கள் - AP

Updated On :31 மே 2026, 5:20 pm IST

ரஷிய எரிசக்தி மையங்கள் மீது உக்ரைன் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகின்றது.

ரஷிய எரிசக்தி மையங்கள் மீது இன்று (மே 31) காலை வரை உக்ரைன் தாக்குதல்களை நடத்தியதாக ரஷிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும், கிரெம்ளின் பகுதியில் உள்ள ஒரு முக்கிய அணுமின் நிலையம் மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் நிலையில் அதனை அந்நாடு மறுத்துள்ளது.

ரஷியாவின் தென்மேற்கில் உள்ள ரோஸ்டோவ் பகுதியின் எரிபொருள் சேமிப்பு மையத்தில் நடத்தப்பட்ட டிரோன் தாக்குதல் காரணமாக அந்தப் பகுதியில் வசிப்பவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். சரடோவ் மாகாணத்தில், டிரோன் தாக்குதல்களின் மூலம் பொதுமக்களின் உள்கட்டமைப்புகளைச் சேதப்படுத்தி, எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

சமீப காலமாக, ரஷியாவின் எண்ணெய் மற்றும் எரிசக்தி மையங்கள் மீது உக்ரைன் அதிகளவில் தாக்குதல்களை நடத்தி வருகின்றது. ரஷியா, உக்ரைன் மீது நடத்தி வரும் 4 ஆண்டு காலத் தாக்குதல்களுக்கு நிதியளிப்பதில் எரிசக்திக் துறையே முக்கியப் பங்காற்றி வருவதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், ரஷியா ஆக்கிரமித்த ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையமான ஸபோரிஷியா அணுமின் நிலையத்தை உக்ரைன் டிரோன் மூலம் தாக்கியதாக ரஷியா தெரிவித்துள்ளது. அதேபோல, ரஷியாவின் ரோசாட்டம் அணுமின் நிலையத்திலும் உக்ரைன் தாக்குதல் நடத்தியுள்ளது.

இதனைத் தொடர்ந்து, உக்ரைன் வெளியிட்ட அறிக்கையில். தாங்கள் சர்வதேச மனிதாபிமான சட்டத்தைக் கடைப்பிடிப்பதாகவும், எந்த அணு உலை மற்றும் எர்சக்தி மையங்கள் மீது தாக்குதல் நடத்தவில்லை என்றும் தெரிவித்துள்ளது.

அப்படியான தாக்குதல்களின் விளைவுகளைப் பற்றி அறிந்திருப்பதாகவும் இது ரஷியாவின் தந்திரம் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். ரஷியாவின் முழுமையான ஆக்கிரமிப்புக்குப் பிறகு, ஸபோரிஷியா அணுசக்தி மையம் மீது தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தப்படுவது அச்சத்தை அதிகரித்துள்ளது.

Summary

Ukraine Attacks Russian Energy Centers

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.