மின்சார வாரிய கட்டுப்பாட்டு மையத்தை 94987 94987 | 1912 ஆகிய எண்களில் 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம் - தமிழக அரசு சென்னை: அண்ணா அறிவாலயத்தில் திமுக இளைஞரணி நிர்வாகிகள் கூட்டம் நடைபெறுகிறது கோவையில் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சிறுமியின் உடல் தகனம்தமிழ்நாட்டில் கடந்த 3 நாட்களில் 844 ரவுடிகள் கைதுபோராட்டம் ஒத்திவைப்பு! மே 25, 26ல் எஸ்பிஐ வங்கி வழக்கம்போல செயல்படும்!தமிழ்நாட்டில் மின்சார தட்டுப்பாடு ஏதும் இல்லை: அமைச்சர் சி.டி.ஆா். நிர்மல்குமார் விளக்கம் கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்கும் பணியாளர்கள் மீது நடவடிக்கை: அமைச்சர் அறிவுறுத்தல் கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை! ஐ.ஜி. விளக்கம்பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பில் தமிழக அரசு தோல்வியா? - ராமதாஸ் கேள்வி தவெக அமைச்சரவையில் விசிக இணைந்ததற்கு பதவி ஆசை காரணம் இல்லை: திருமாவளவன் விளக்கம்சிபிஎஸ்இ விடைத்தாள் மறுமதிப்பீடு செய்ய ரூ.69 ஆயிரம் கட்டணம்! உண்மை என்ன?எங்கள் கையெழுத்தையே படிக்க முடியவில்லை: சிபிஎஸ்இ மாணவர்கள் அதிருப்திசென்னையில் வானம் மேகமூட்டம்! மெரினாவில் வீசிய சூறைக்காற்று!கோவை சிறுமி கொலை: கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் குவிப்புமதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயில் வைகாசி வசந்த உற்சவம்! பக்தர்கள் சுவாமி தரிசனம்!நாட்டில் அதிகபட்ச வெப்பநிலை 118.4 டிகிரியை தொடுகிறது! மே 28 வரை எச்சரிக்கை
/

உக்ரைன் டிரோன் தாக்குதல்: ரஷிய எண்ணெய் கிடங்கில் தீ விபத்து!

உக்ரைன் டிரோன் தாக்குதலில் ரஷியாவின் எண்ணெய் கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

News image

ரஷிய குடியிருப்புப் பகுதியில் உக்ரைன் நடத்திய டிரோன் தாக்குதலில் பற்றி எரியும் வீடு. - AP

Updated On :23 மே 2026, 6:20 pm IST

உக்ரைன் டிரோன் தாக்குதலில் ரஷியாவின் எண்ணெய் கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

ரஷியாவின் நோவோரோசிஸ்க் நகரில் உள்ள எண்ணெய் கிடங்கில் உக்ரைன் நடத்திய டிரோன் தாக்குதல் காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

ரஷ்யாவின் அஸ்ட்ரா செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியின்படி, ரஷிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஷெஷ்கார் எண்ணெய் கிடங்கின் மீது இந்தத் தாக்குதல் நடைபெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. இதில், இருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

அந்நிறுவனம் வெளியிட்டுள்ள புகைப்படங்களில் எண்ணெய் கிடங்கு புகை மண்டலமாகக் காணப்படுகின்றது. ஆனால், இந்தத் தாக்குதல் பற்றி உக்ரைன் தற்போது வரை எந்த அறிக்கையும் வெளியிடவில்லை.

ரஷியாவின் 4 ஆண்டுகால தாக்குதல்களை முறியடிக்க, உள்நாட்டில் உக்ரைன் உருவாக்கிய டிரோன் மற்றும் ஏவுகணைத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, தனது நீண்டதூர தாக்குதல் திறனை உக்ரைன் மேம்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், உக்ரைனில் ரஷியா ஆக்கிரமித்துள்ள லுஹான்ஸ்க் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியின் தங்கும் விடுதி மீது நேற்று (மே 22) அதிகாலை உக்ரைன் நடத்திய டிரோன் தாக்குதலில் 11 பேர் பலியானதாக ரஷியா தெரிவித்துள்ளது.

இந்தத் தாக்குதலைக் கண்டித்த ரஷிய அதிபர் புதின், இதனைக் போர்க் குற்றம் என்று குறிப்பிட்டு, விடுதியின் அருகில் எந்த ராணுவத் தளங்களும் இல்லாத நிலையிலும் அங்கு தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார்.

மேலும், இந்தத் தாக்குதல் தொடர்பாக ரஷ்யாவின் வேண்டுகோளின் பேரில் நடைபெற்ற ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் அவசரக் கூட்டத்தில், உக்ரைன் தூதர் மெல்னிக் ஆண்ட்ரி, ரஷிய அதிகாரிகள் முன்வைத்த போர்க்குற்றங்கள் தொடர்பானக் குற்றச்சாட்டுகளுக்கு மறுப்புத் தெரிவித்தார். அவை ரஷியாவின் நாடகம் எனக் குறிப்பிட்ட அவர், அந்தத் தாக்குதலில் ரஷிய போர் தளங்கள் மட்டுமே குறிவைக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.

Summary

Ukrainian drone attack triggers fire at Russian oil terminal

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.