நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

உக்ரைன் டிரோன் தாக்குதல்: ரஷிய எண்ணெய் கிடங்கில் தீ விபத்து!

உக்ரைன் டிரோன் தாக்குதலில் ரஷியாவின் எண்ணெய் கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

News image

ரஷிய குடியிருப்புப் பகுதியில் உக்ரைன் நடத்திய டிரோன் தாக்குதலில் பற்றி எரியும் வீடு. - AP

Updated On :23 மே 2026, 6:20 pm IST

உக்ரைன் டிரோன் தாக்குதலில் ரஷியாவின் எண்ணெய் கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

ரஷியாவின் நோவோரோசிஸ்க் நகரில் உள்ள எண்ணெய் கிடங்கில் உக்ரைன் நடத்திய டிரோன் தாக்குதல் காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

ரஷ்யாவின் அஸ்ட்ரா செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியின்படி, ரஷிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஷெஷ்கார் எண்ணெய் கிடங்கின் மீது இந்தத் தாக்குதல் நடைபெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. இதில், இருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

அந்நிறுவனம் வெளியிட்டுள்ள புகைப்படங்களில் எண்ணெய் கிடங்கு புகை மண்டலமாகக் காணப்படுகின்றது. ஆனால், இந்தத் தாக்குதல் பற்றி உக்ரைன் தற்போது வரை எந்த அறிக்கையும் வெளியிடவில்லை.

ரஷியாவின் 4 ஆண்டுகால தாக்குதல்களை முறியடிக்க, உள்நாட்டில் உக்ரைன் உருவாக்கிய டிரோன் மற்றும் ஏவுகணைத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, தனது நீண்டதூர தாக்குதல் திறனை உக்ரைன் மேம்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், உக்ரைனில் ரஷியா ஆக்கிரமித்துள்ள லுஹான்ஸ்க் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியின் தங்கும் விடுதி மீது நேற்று (மே 22) அதிகாலை உக்ரைன் நடத்திய டிரோன் தாக்குதலில் 11 பேர் பலியானதாக ரஷியா தெரிவித்துள்ளது.

இந்தத் தாக்குதலைக் கண்டித்த ரஷிய அதிபர் புதின், இதனைக் போர்க் குற்றம் என்று குறிப்பிட்டு, விடுதியின் அருகில் எந்த ராணுவத் தளங்களும் இல்லாத நிலையிலும் அங்கு தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார்.

மேலும், இந்தத் தாக்குதல் தொடர்பாக ரஷ்யாவின் வேண்டுகோளின் பேரில் நடைபெற்ற ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் அவசரக் கூட்டத்தில், உக்ரைன் தூதர் மெல்னிக் ஆண்ட்ரி, ரஷிய அதிகாரிகள் முன்வைத்த போர்க்குற்றங்கள் தொடர்பானக் குற்றச்சாட்டுகளுக்கு மறுப்புத் தெரிவித்தார். அவை ரஷியாவின் நாடகம் எனக் குறிப்பிட்ட அவர், அந்தத் தாக்குதலில் ரஷிய போர் தளங்கள் மட்டுமே குறிவைக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.

Summary

Ukrainian drone attack triggers fire at Russian oil terminal

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.