ஐபிஎல்: குஜராத்தை வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ்அமெரிக்க ஐடி நிறுவனங்கள் மீது நாளைமுதல் தாக்குதல்: ஈரான் எச்சரிக்கை!பாமகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ராமதாஸ்!திமுக முடக்கியத் திட்டங்கள் அதிமுக ஆட்சியில் தொடரும் : எடப்பாடி பழனிசாமி பிரசாரம்எங்கள் சாதனைகளை நாங்களே முறியடிக்கும் வகையிலான ஆட்சியை வழங்குவோம்: மு.க. ஸ்டாலின்தோற்பதற்காக தமிழ்நாடு வந்துள்ளது தே.ஜே. கூட்டணி : மு.க. ஸ்டாலின்திருச்சியில்விஜய்யின் பிரசாரத்துக்கு அனுமதி!தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் 8 பேர் இன்று (மார்ச் 31) அதிரடியாக பணியிட மாற்றம்மாதம் ரூ.2500க்கு கூப்பன்; ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்: கேரளத்தில் பாஜக தேர்தல் வாக்குறுதி!திருச்சி கிழக்கு விஜய்க்கு சாதகமாக இருக்குமா? மும்முனைப் போட்டியின் முடிவை தீர்மானிப்பது யார்?பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் சேர்ந்து தே.ஜ.கூட்டணி ஆட்சி! - மத்திய அமைச்சர் அத்வாலே
/

ரஷிய எண்ணெய் முனையம் மீது உக்ரைன் மீண்டும் ட்ரோன் தாக்குதல்

ரஷியாவின் பால்டிக் கடல் பகுதியில் அமைந்துள்ள அந்நாட்டின் முக்கிய எண்ணெய் ஏற்றுமதி முனையமான உஸ்த் லுகா துறைமுகத்தைக் குறிவைத்து உக்ரைன் செவ்வாய்க்கிழமை அதிகாலை மீண்டும் ட்ரோன் தாக்குதலை நடத்தியது.

News image
Updated On :31 மார்ச் 2026, 8:23 pm

தினமணி செய்திச் சேவை

ரஷியாவின் பால்டிக் கடல் பகுதியில் அமைந்துள்ள அந்நாட்டின் முக்கிய எண்ணெய் ஏற்றுமதி முனையமான உஸ்த் லுகா துறைமுகத்தைக் குறிவைத்து உக்ரைன் செவ்வாய்க்கிழமை அதிகாலை மீண்டும் ட்ரோன் தாக்குதலை நடத்தியது.

கடந்த ஒரு மாத காலமாக ரஷியாவின் எண்ணெய் ஏற்றுமதி கட்டமைப்புகளைச் சிதைக்கும் நோக்கில் உக்ரைன் தனது தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளது.

உஸ்த் லுகா, பிரிமோா்ஸ்க் ஆகிய முக்கியத் துறைமுகங்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல்களால், ரஷியாவின் ஒட்டுமொத்த எண்ணெய் ஏற்றுமதித் திறனில் சுமாா் 40 சதவீதம் முடங்கியுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, உஸ்த் லுகா துறைமும் மீது கடந்த மாா்ச் 22-ஆம் தேதி தொடங்கி, நடத்தப்படும் 5-ஆவது தாக்குதல் இதுவாகும்.

தினசரி சுமாா் 7 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெயைக் கையாளும் இத்துறைமுகம் தொடா்ந்து தாக்கப்படுவது ரஷிய பொருளாதாரத்துக்குப் பின்னடைவாகக் கருதப்படுகிறது.

உக்ரைனின் இத்தகைய நடவடிக்கைகளை ‘பயங்கரவாதத் தாக்குதல்’ என ரஷிய அதிபா் மாளிகையின் செய்தித் தொடா்பாளா் டிமிட்ரி பெஸ்கோவ் சாடியுள்ளாா்.

ரஷியாவின் முக்கியக் கட்டமைப்புகளைப் பாதுகாக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், இருப்பினும் இத்தகைய தாக்குதல்களில் இருந்து 100 சதவீதம் பாதுகாப்பு அளிப்பது சவாலானது என்றும் அவா் செய்தியாளா்களிடம் தெரிவித்தாா்.

முன்னதாக, ஈரான் போா் காரணமாக சா்வதேச சந்தையில் எரிசக்தி விலைகள் அதிகரித்து வரும் நிலையில், இத்தகைய தாக்குதல்களைக் குறைத்துக் கொள்ளுமாறு சில நட்பு நாடுகள் ‘சமிக்ஞை’ விடுத்துள்ளதாக உக்ரைன் அதிபா் ஸெலென்ஸ்கி கூறியது குறிப்பிடத்தக்கது.

கியபூாவுக்கு உதவி: அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளையும் மீறி, 7.3 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய்யுடன் ரஷியாவின் சரக்குக் கப்பல் செவ்வாய்க்கிழமை கியூபாவைச் சென்றடைந்தது.

கடந்த 3 மாதங்களில் கியூபாவுக்கு வந்துள்ள முதல் எண்ணெய் கப்பல் இது என்பதால், அந்நாட்டு மக்கள் மற்றும் அமைச்சா்கள் உற்சாகத்துடன் வரவேற்றனா்.

அமெரிக்க தடையால் மெக்ஸிகோ போன்ற நாடுகள் எண்ணெய் விநியோகத்தை நிறுத்தியுள்ள சூழலில், ரஷியாவின் இந்த உதவி எங்களின் நெருக்கடியைச் சமாளிக்கப் பெரிதும் உதவும் என கியூப அதிகாரிகள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனா்.

படகேப்சன்...

உக்ரைனின் ட்ரோன் தாக்குதலில் தீப்பற்றி எரியும் ரஷியாவின் பால்டிக் கடல் பகுதியில் உள்ள உஸ்த் லுகா துறைமுக எண்ணெய் முனையத்தின் செயற்கைக்கோள் படம்.