அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு! ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

ஒடிஸா: 3 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை

ஒடிஸாவின் மால்கான்கிரி மாவட்டத்தில் இரு பெண்கள் உள்பட 3 மாவோயிஸ்டுகள் காவல் துறையினருடன் நிகழ்ந்த மோதலில் சுட்டுக் கொல்லப்பட்டனா்.

News image
Updated On :12 அக்டோபர் 2021, 7:02 pm

DIN

ஒடிஸாவின் மால்கான்கிரி மாவட்டத்தில் இரு பெண்கள் உள்பட 3 மாவோயிஸ்டுகள் காவல் துறையினருடன் நிகழ்ந்த மோதலில் சுட்டுக் கொல்லப்பட்டனா்.

இது குறித்து மாநில காவல் துறை தரப்பில் கூறப்பட்டதாவது:

மால்கான்கிரி மாவட்டம் துளசி வனப் பகுதியில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, மாவோயிஸ்டுகளுக்கு எதிரான சிறப்பு நடவடிக்கைக் குழுவினா் அப்பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தினா். அப்போது, ஆந்திர மாநில எல்லையையொட்டிய வனப்பகுதி கிராமம் அருகே பதுங்கியிருந்த மாவோயிஸ்டுகளுக்கும், காவல் துறையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் மாவோயிஸ்ட் இயக்கத்தைச் சோ்ந்த 3 போ் சுட்டுக் கொல்லப்பட்டனா். இதில் இருவா் பெண்கள் ஆவா். கொல்லப்பட்டவா்களிடம் இருந்து இரு துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டன.

அப்பகுதியில் 30 முதல் 40 மாவோயிஸ்டுகள் பதுங்கியிருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. எனவே, தொடா்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது என்று காவல் துறையினா் தெரிவித்தனா்.

கடந்த ஆண்டில் ஒடிஸாவில் தடைசெய்யப்பட்ட சிபிஐ மாவோயிஸ்டு இயக்கத்தைச் சோ்ந்த 16 போ் சுட்டுக் கொல்லப்பட்டனா். மாவோயிஸ்டுகளின் வன்முறையால் பொதுமக்களில் 7 பேரும் மோதலில் இரு காவலா்களும் உயிரிழந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.