விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

மகாராஷ்டிரத்தில் அக்.22 முதல் திரையரங்குகள் திறப்பு

கரோனா பொதுமுடக்கம் காரணமாக மகாராஷ்டிர மாநிலத்தில் மூடப்பட்டிருந்த திரையரங்குகள் அக்டோபர் 22ஆம் தேதி முதல் மீண்டும் திறக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

News image
மகாராஷ்டிரத்தில் அக்.22 முதல் திரையரங்குகள் திறப்பு
Updated On :12 அக்டோபர் 2021, 9:49 am

DIN

கரோனா பொதுமுடக்கம் காரணமாக மகாராஷ்டிர மாநிலத்தில் மூடப்பட்டிருந்த திரையரங்குகள் அக்டோபர் 22ஆம் தேதி முதல் மீண்டும் திறக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

கரோனா இரண்டாம் அலையின் தாக்கம் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பல்வேறு மாநிலங்களும் பொதுமுடக்கத்தை அறிவித்து செயல்படுத்தின. அதன் ஒருபகுதியாக பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான திரையரங்குகள், பூங்காக்கள் உள்ளிட்டவை தற்காலிகமாக மூடப்பட்டன.

மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திரையரங்குகள் திறக்கப்பட்ட நிலையில் கரோனா இரண்டாம் அலையின் காரணமாக மீண்டும் மூடப்பட்டது. பல்வெறு மாநிலங்களில் தொற்று பரவல் கட்டுக்குள் வந்தாலும் மகாராஷ்டிரத்தில் தொடர்ச்சியாக அதிகரித்தவண்ணம் இருந்தது.

இந்நிலையில் தற்போது மாநிலம் முழுவதும் கரோனா பரவல் கட்டுக்குள் வந்துள்ளதையடுத்து திரையரங்குகள் மற்றும் பொது அரங்குகளை மீண்டும் திறக்க அம்மாநில அரசு அனுமதியளித்துள்ளது.

திரையரங்குகளில் 50 சதவிகிதத்தினர் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தியுள்ள மாநில அரசு கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கட்டாயம் பின்பற்ற அறிவுறுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.