காந்தியடிகள் கோரிக்கை விடுத்ததன் பேரிலேயே சாவர்க்கர் ஆங்கிலேயர்களுக்கு மன்னுப்பு கடிதம் எழுதியதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்ததிருந்தார்.
இதை கடுமையாக விமரிசித்துள்ள ஏஐஎம்ஐஎம் கட்சி தலைவர் அசாதுதீன் ஒவைசி, பாஜக விரைவில் சாவர்க்கரை 'தேசத் தந்தை' என்று அறிவிக்கும் எனக் கூறியுள்ளார்.
ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு ஒவைசி அளித்த பேட்டியில், "அவர்கள் (பாஜக) பொய்யான வரலாற்றை முன்வைக்கின்றனர். இது தொடர்ந்தால், அவர்கள் அண்ணல் காந்தியை நீக்கிவிட்டு, மகாத்மா காந்தியின் கொலையில் குற்றம் சாட்டப்பட்ட சாவர்க்கரை தேசத்தின் தந்தையாக அறிவித்து விடுவார்கள்.
காந்தி படுகொலையில் சாவர்க்கர் உடந்தையாக இருந்ததாக நீதிபதி ஜீவன் லால் கபூரின் விசாரணை ஆணையமே தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க | உலகம் முழுவதும் கரோனாவால் 23.94 கோடி பேர் பாதிப்பு
முன்னதாக, 'வீர் சாவர்க்கர்: தி மேன் வூ குட் ஹாவ் பிரிவேன்டட் பார்ட்டிசன்' என்ற புத்தகத்தின் அறிமுக விழாவில் பேசிய ராஜ்நாத் சிங், "சாவர்க்கர் பற்றி பொய் பரப்பப்பட்டது.
சிறையில் இருந்து விடுவிக்கக் கோரி அவர் ஆங்கிலேயே அரசிடம் கருணை மனுக்களைத் தாக்கல் செய்தார் என்று மீண்டும் மீண்டும் கூறப்பட்டது. மகாத்மா காந்தி தான் கருணை மனு தாக்கல் செய்யும்படி அவரிடம் கூறினார்" என்றார்.