ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

புணேவில் பெண் ராணுவ அதிகாரி தற்கொலை

புணேவில் உள்ள ராணுவ பயிற்சி மையத்தில் பெண் ராணுவ அதிகாரி புதன்கிழமை தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :13 அக்டோபர் 2021, 7:52 am

DIN

புணேவில் உள்ள ராணுவ பயிற்சி மையத்தில் பெண் ராணுவ அதிகாரி புதன்கிழமை தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் புணே அருகே உள்ள வான்வாடியில் ராணுவ நுண்ணறிவு பயிற்சி பள்ளி செயல்பட்டு வருகின்றது. இங்கு ராணுவம், விமானப்படை, கப்பற்படை அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்படும்.

ஜெய்பூரில் பணிபுரியும் உத்தரகண்டை சேர்ந்த  43 வயதுடைய பெண் லெப்டினன்ட் கர்னல் அதிகாரி மூன்று மாத பயிற்சிக்காக புணே வந்துள்ளார். இந்நிலையில், இன்று காலை அவரது தங்கும் விடுதியில் தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து புணே காவல்துறையினர் தெரிவித்தது:

பெண் அதிகாரி மூன்று மாத பயிற்சிக்காக புணே வந்துள்ளார். இவரது கணவர் ராணுவத்தில் லெப்டினன்ட் பதவியில் இருக்கிறார். இவர்களின் விவாகரத்து வழக்கு நிலுவையில் உள்ளது. 

மேலும், பெண் அதிகாரி தற்கொலைக்கான கடிதம் ஏதும் எழுதி வைக்கவில்லை. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.