புணேவில் உள்ள ராணுவ பயிற்சி மையத்தில் பெண் ராணுவ அதிகாரி புதன்கிழமை தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் புணே அருகே உள்ள வான்வாடியில் ராணுவ நுண்ணறிவு பயிற்சி பள்ளி செயல்பட்டு வருகின்றது. இங்கு ராணுவம், விமானப்படை, கப்பற்படை அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்படும்.
ஜெய்பூரில் பணிபுரியும் உத்தரகண்டை சேர்ந்த 43 வயதுடைய பெண் லெப்டினன்ட் கர்னல் அதிகாரி மூன்று மாத பயிற்சிக்காக புணே வந்துள்ளார். இந்நிலையில், இன்று காலை அவரது தங்கும் விடுதியில் தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து புணே காவல்துறையினர் தெரிவித்தது:
பெண் அதிகாரி மூன்று மாத பயிற்சிக்காக புணே வந்துள்ளார். இவரது கணவர் ராணுவத்தில் லெப்டினன்ட் பதவியில் இருக்கிறார். இவர்களின் விவாகரத்து வழக்கு நிலுவையில் உள்ளது.
மேலும், பெண் அதிகாரி தற்கொலைக்கான கடிதம் ஏதும் எழுதி வைக்கவில்லை. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விண்ணப்பித்துவிட்டீர்களா..? பிஎஸ்என்எல் நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி!

பூந்தொட்டியில் மறைந்திருந்த பாம்பு! பத்திரமாக மீட்பு! | CBE

இம்பாக்ட் வீரராக களமிறக்கப்பட்ட ஷர்துல் தாக்குரின் வித்தியாசமான சாதனை..! கோபத்தில் மும்பை ரசிகர்கள்!

காங்கிரஸ் பயிற்சி முகாமில் ராகுல் பங்கேற்பு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


