சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கோவாவில் மீண்டும் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்போம்: அமித் ஷா உறுதி

மத்தியிலும் மாநிலத்திலும் உள்ள 'இரட்டை என்ஜின்' பாஜக அரசுகள் கோவாவின் வளர்ச்சிக்கு உதவி செய்யும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

News image
அமித் ஷா (கோப்புப்படம்)
Updated On :14 அக்டோபர் 2021, 11:00 am

DIN

அடுத்தாண்டு பிப்ரவிரி மாதம் நடைபெறவுள்ள கோவா சட்டப்பேரவை தேர்தலில் ஆளும் பாஜக பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்கும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

தெற்கு கோவாவில் உள்ள தர்பந்தோரா கிராமத்தில் தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகத்தின் அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர், "மாநிலத்தில் அடுத்த தேர்தலில் பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சி அமைக்கும். தேர்தலுக்கு இன்னும் நேரம் இருக்கிறது. 

மத்தியில் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சி நடைபெறும் வரும் நிலையில், மாநிலத்திலும் பாஜக அரசைத் தேர்ந்தெடுக்க கோவா மக்கள் தங்கள் மனதை தயார் செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். மத்தியலும் மாநிலத்திலும் உள்ள 'இரட்டை என்ஜின்' பாஜக அரசுகள் கோவாவின் வளர்ச்சிக்கு உதவி செய்யும். நவம்பர் 15ஆம் தேதி முதல், திட்டமிடப்படாத விமான சேவையை தொடங்க பிரதமர் முடிவு செய்திருக்கிறார்" என்றார்.

அடுத்தாண்டு கோவா சட்டப்பேரவை தேர்தலில் கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆளும் பாஜக, எதிரக்கட்சியாக உள்ள காங்கிரஸை தவிர்த்து மம்தா தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ், அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி, மகாராஷ்டிராவில் ஆளும் கட்சியாக உள்ள சிவ சேனா ஆகிய பிராந்தி கட்சிகளும் போட்டியிடவுள்ளன. 

கடந்த 2017ஆம் ஆண்டு, 40 சட்டப்பேரவை தொகுதிகளை கொண்ட கோவாவில் காங்கிரஸ் 17 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இருப்பினும், 13 தொகுதிகளில் வெற்ற பாஜக உள்ளூர் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.