விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

உ.பி. அருகே ரயிலின் 24 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து: ரயில் சேவை பாதிப்பு

உத்தரப் பிரதேசத்தில் சரக்கு ரயிலின் 24 பெட்டிகள் வெள்ளிக்கிழமை காலை தடம் புரண்டதால் ரயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

News image
உ.பி. அருகே ரயிலின் 24 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து
Updated On :15 அக்டோபர் 2021, 11:30 am

DIN

உத்தரப் பிரதேசத்தில் சரக்கு ரயிலின் 24 பெட்டிகள் வெள்ளிக்கிழமை காலை தடம் புரண்டதால் ரயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

பிரயாக்ராஜ் மண்டலம் துண்ட்லா - கான்பூர் வழித்தடத்தில் அம்பியாபூர் மற்றும் ரூஷா ரயில் நிலையத்திற்கு இடையே இன்று அதிகாலை 4 மணியளவில் சரக்கு ரயிலின் 24 காலிப் பெட்டிகள் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டுள்ளது.

இதனால், துண்ட்லா - கான்பூர் வழித்தடத்தில் செல்லும் அனைத்து பயணிகள் ரயில்களும் இன்று ரத்து செய்யப்படுவதாக வடமத்திய ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து வடமத்திய ரயில்வே மூத்த அதிகாரி மோஹித் சந்திரா கூறுகையில்,

“24 பெட்டிகள் தடம் புரண்டதால் இருவழிகளிலும் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இன்று நள்ளிரவுக்குள் பணிகள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றன. கான்பூரிலிருந்து ரயில்கள் மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்பட்டுள்ளன.”

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.