கேரளத்தில் புதிதாக 8,867 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
மேலும் 9,872 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 67 பேர் பலியாகியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து, மாநிலத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 48,38,811 ஆக உயர்ந்துள்ளது. இதில் 47,16,728 பேர் குணமடைந்துவிட்டனர். மொத்த பலி எண்ணிக்கை 26,734 ஆக உள்ளது.
இதையும் படிக்க | ’உண்மையை உரக்க சொன்னால்...': நடிகர் சூர்யா கருத்து
இதன்மூலம், நோய்த் தொற்றுக்கான சிகிச்சைப் பெற்று வருவோர் எண்ணிக்கை 94,756 ஆகக் குறைந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 79,554 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன.