ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

உ.பி: அரசு வேலை வாங்கித் தருவதாக 500 பேரை ஏமாற்றிய 4 பேர் கைது

உத்தரப் பிரதேச மாநிலத்தில் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி 500 பேரை ஏமாற்றிய 4 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

News image
உ.பி: அரசு வேலை வாங்கித் தருவதாக 500 பேரை ஏமாற்றிய 4 பேர் கைது
Updated On :22 அக்டோபர் 2021, 6:34 am

DIN

உத்தரப் பிரதேச மாநிலத்தில் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி 500 பேரை ஏமாற்றிய 4 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

உத்திரப் பிரதேச மாநிலம் லக்னோவில் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி 500 பேரிடம் பல லட்சம் ரூபாயை ஏமாற்றிய 4 பேரை அம்மாநில சிறப்பு படையினர் கைது செய்திருக்கிறார்கள்.

மேலும் கைதானவர்களிடமிருந்து போலி அரசுப் பணி ஆணைச் சான்றிதழ் , 9 ஏடிஎம் கார்டுகள் , 6 கைபேசிகள் , சட்டமன்ற நுழைவுச் சீட்டு , 4 இரு சக்கர வாகனங்கள் மற்றும் ரூ.2,387 ஆகியவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து சிறப்பு படையின் துணைக் காவல் கண்காணிப்பாளர் விக்ரம் சிங் , ‘ அப்பாவி மக்களிடம் அரசுப் பணி ஆசையைத் தூண்டி அவர்களிடமிருந்து பெரிய தொகையை போலி நிறுவனங்களின் பெயரில் இவர்கள் பெற்றது உறுதியாகியிருக்கிறது’ எனத் தெரிவித்தார்.

கைதானவர்கள்: அருண்குமார் துபே , அனிருத்தா பாண்டே , காலித் முனாவர் , அனுராக் மிஸ்ரா

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.