புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

மும்பையில் 61 அடுக்குமாடிக் குடியிருப்பில் பயங்கர தீ விபத்து

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் 61 அடிக்குமாடியைக் கொண்ட குடியிருப்பில் இன்று முற்பகலில் பயங்கர தீ விபத்து நேரிட்டது.

News image

கோப்புப்படம்

Updated On :22 அக்டோபர் 2021, 10:34 am


மும்பை: மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் 61 அடிக்குமாடியைக் கொண்ட குடியிருப்பில் இன்று முற்பகலில் பயங்கர தீ விபத்து நேரிட்டது.

கர்ரே சாலையில் அமைந்துள்ள ஒன் அவிக்னா பூங்கா கட்டடத்தின் 19வது மாடியில் இன்று முற்பகலில் பயங்கர தீ விபத்து நேரிட்டது.

இது குறித்து தகவல் அறிந்ததும் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கட்டடத்துக்குள் சிக்கியிருப்பவர்களை மீட்கும் பணியும் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

தீ விபத்தில் சிக்கியவர்களின் நிலை குறித்து இதுவரை  எந்தத் தகவலும் இல்லை. சுமார் 12 தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.