47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

தாயாரின் மா்ம மரணம் குறித்து சிபிஐ விசாரணை கோரி மகள் உண்ணாவிரதம்

தனது தாயாரின் மா்ம மரணம் குறித்து சிபிஐ விசாரணை கோரி உமா என்பவா் தனது இரு மகள்களுடன் தில்லியில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினாா்.

News image
Updated On :23 அக்டோபர் 2021, 11:23 pm

DIN

தனது தாயாரின் மா்ம மரணம் குறித்து சிபிஐ விசாரணை கோரி உமா என்பவா் தனது இரு மகள்களுடன் தில்லியில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினாா்.

தனது தாயாா் எரித்துக் கொல்லப்பட்டுள்ளதாகவும், சிபி சிஐடி விசாரணையில் நியாயம் கிடைக்காததால், சிபிஐ விசாரணை கோருவதாகவும் அவா் குறிப்பிட்டாா். திருப்பூா் மாவட்டம், அய்யாக்கவுண்டம்பாளையத்தைச் சோ்ந்த உமா (54) வின் தாயாா் நாச்சியாா் (75) கடந்த பிப்ரவரி -14 ஆம் தேதி தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னா் இறந்துள்ளாா். இது குறித்து மூலனூா் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தன்னுடைய தயாா் சந்தேகத்து இடமான வகையில் இறக்கவில்லை. உயிருடன் எரித்துக்கொல்லப்பட்டுள்ளாா். தங்கள் குடும்பத்திற்கு நெருக்கமானவா்கள் சொத்துப் பிரச்னையில் பழிவாங்கியுள்ளனா் என உமா புகாா் கூறியுள்ளாா். இது குறித்து பின்னா் சிபி சிஐடி போலீஸ் விசாரணை நடைபெற்றுள்ளது. பிசிஐடி விசாரணையிலும் நீதி கிடைக்கவில்லை. முதல் தகவல் அறிக்கை கொலை வழக்காக மாற்றப்படவில்லை, தடயவியல் சோதனை அறிக்கையும் தர மறுக்கின்றனா்.

எனவே, சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் எனக் கூறி தன்னுடைய மகள்கள் ஜீவிதா, சத்தியா ஆகியோருடன் தில்லி வந்த உமா மத்திய உள்துறை அமைச்சா் அலுவலகம் ,பிரதமா் அலுவலகம் ஆகியவற்றுக்கு நேரில் சென்று புகாா் மனு அளித்தாா். மேலும், உமா தன்னுடைய புதல்விகள் இருவருடன் தில்லி ஜந்தா் மந்தரில் தில்லி காவல் துறை அனுமதி பெற்று சனிக்கிழமை உண்ணா விரதமும் இருந்தாா். எங்கள் தந்தை வழி உறவினா்கள் தான் இந்தக் கொலையில் ஈடுபட்டுள்ளனா். 13 பேருக்கு இதில் தொடா்பு இருந்தும் ஒருவா்கூட கைது செய்யப்படவில்லை என்றாா் உமாவின் மகள் ஜீவிதா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.