மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

‘அந்தப் பணத்தில்தான் தடுப்பூசி கொடுத்தோம்’: பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு மத்திய அமைச்சர் பதில்

இந்தியாவில் உயர்த்தப்பட்ட வரிகளின் மூலமே இலவச கரோனா தடுப்பூசி கொடுக்க முடிந்தது என மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.

News image
ஹர்தீப் சிங் புரி
Updated On :28 ஜனவரி 2024, 4:26 am

DIN

இந்தியாவில் உயர்த்தப்பட்ட வரிகளின் மூலமே இலவச கரோனா தடுப்பூசி கொடுக்க முடிந்தது என மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. பெட்ரோல், டீசல் முறையே லிட்டருக்கு நூறைக் கடந்து விற்பனையாகி வருகின்றன.

இந்நிலையில் இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்த மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, “சாலைகள் அமைப்பது, ஏழைகளுக்கு வீடுகள் கட்டுவது மற்றும் பிற சமூக நலத் திட்டங்கள் போன்ற நாடு முழுவதுக்குமான வளர்ச்சித் திட்டங்களுக்கு வரி வருவாயை சார்ந்திருப்பதால் வரிகளைக் குறைப்பது என்பது சொந்தக் காலையே வெட்டுவதற்கு சமமாகும்” எனத் தெரிவித்தார்.

மேலும் இந்தியாவில் எளிமையாக, “விலைவாசி உயர்ந்துவிட்டது, வரிகளைக் குறைக்கவேண்டும் எனக் கூறும் அரசியல் நடந்துவருகிறது. சர்வதேச எண்ணைய் சந்தை உள்ளிட்ட பல்வேறு காரணிகள் விலைவாசி உயர்வுக்கு அடிப்படையாக உள்ளன" என அமைச்சர் பூரி குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய அவர்,  “இந்தியாவில் 100 கோடிக்கும் அதிகமான கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. கரோனா பேரிடர் காலத்தில் 90 கோடி மக்களுக்கு உணவளித்துள்ளோம். உஜ்வாலா திட்டத்தின்கீழ் 8 கோடி ஏழை மக்களுக்கு சமையல் எரிவாயு இணைப்பை வழங்கியுள்ளோம். இவைகளெல்லாம் இந்த வரிகளின் மூலம் செய்துள்ளோம். வரிகளைக் குறைப்பது குறித்து பதிலளிக்க நான் நிதியமைச்சர் அல்ல” என மத்திய அமைச்சர் பூரி தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.