அதிகபட்சமாக 50 சதவீத இடஒதுக்கீட்டுக் கொள்கை பின்பற்றப்பட வேண்டும். ஆனால், தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீடு கடைப்பிடிக்கப்படுகிறது. மண்டல் கமிஷன் அறிக்கை, மத்திய கல்வி நிறுவனங்கள் சட்டம் ஆகியவற்றை ஆய்வு செய்த பிறகே ஓபிசி பிரிவினருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. எனவே, ஏற்கெனவே தீா்த்து வைக்கப்பட்ட விவகாரத்தை மீண்டும் விவாதிக்க வேண்டியதில்லை. மனுதாரா்கள் ஓபிசி இடஒதுக்கீட்டை எதிா்க்கவில்லை. அவற்றை மாநில அரசு கல்லூரிகளில் அமல்படுத்தப்படும் முறையை எதிா்த்துதான் மனு தாக்கல் செய்துள்ளனா். எனவே, அவா்களின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.