தமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவுமுதல்வர் விஜய்க்கு நன்றி சொன்ன ஸோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு! ஏன்?கொலையும் செய்வாள் நாளைய மனைவி! பணக்கார இளைஞர் சாவில் கைதான காதலிதைலாபுரத்தில் அன்புமணி! கட்டியணைத்து கண்ணீருடன் வரவேற்ற ராமதாஸ்!முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்
/

ரூ.3 கோடி வருமான வரி செலுத்த உ.பி. ரிக்‎ஷா ஓட்டுநருக்கு நோட்டீஸ்

சுமார் 3 கோடி ரூபாய் அளவுக்கு வருமான வரி செலுத்துமாறு நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டிருப்பது குறித்து உத்தரப்பிரதேச மாநிலத்தில் ரிக்‎ஷா ஓட்டுநர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

News image

ரூ.3 கோடி வருமான வரி செலுத்த உ.பி. ரிக்‎ஷா ஓட்டுநருக்கு நோட்டீஸ்

Updated On :25 அக்டோபர் 2021, 1:42 pm IST


மதுரா: சுமார் 3 கோடி ரூபாய் அளவுக்கு வருமான வரி செலுத்துமாறு நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டிருப்பது குறித்து உத்தரப்பிரதேச மாநிலத்தில் ரிக்‎ஷா ஓட்டுநர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

பிரதாப் சிங், பகல்பூர் பகுதியில் அமர் காலனியில் வசித்து வருகிறார். இவர் காவல்நிலையத்தில் அளித்திருக்குக்கும் புகார் மனுவில், தான் ஒரு மோசடியாளர் என்று கூறி, வருமான வரித்துறை அனுப்பியிருக்கும் நோட்டீஸ் குறித்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை, ஆனால், பிரதாப் சிங் கூறியிருக்கும் புகார் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

வங்கியிலிருந்து பான் அட்டை கேட்டதால், கடந்த மார்ச் மாதம் தான் பான் அட்டைக்கு விண்ணப்பித்துள்ளார். பிறகு, உண்மையான பான் அட்டைக்குப் பதிலாக வண்ண நிற நகல்தான் கிடைத்துள்ளது. இவருக்கு படிப்பறிவு இல்லாததால், இது நகல் என்பது தெரியாமல் போய்விட்டது. 

இந்த நிலையில் அக்டோபர் 19ஆம் தேதி தனக்கு வருமான வரித்துறையிடமிருந்து அழைப்பு வந்ததாகவும், அவர்கள் ரூ.3,47,54,896 ஐ வருமான வரி செலுத்துமாறு கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.

தற்போது விசாரணை நடத்தி வரும் காவல்துறையினர், இவரது பான் அட்டையைப் பயன்படுத்தி யாரோ ஒருவர் ஜிஎஸ்டி எண் பெற்ற வியாபாரம் செய்து வருவதாகவும், அதன் மூலம் அவர்கள் 2018 - 19ல் ரூ.43,44,36,201 வணிகம் செய்திருப்பதகாவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அடையாளம் தெரியாத நபர்கள் மோசடி செய்ததாக வழக்குப் பதிவு செய்யுமாறு காவல்நிலையத்துக்கு வருமான வரித்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.