மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

100 கோடி தடுப்பூசி மட்டுமல்ல இதையும் மோடி கொண்டாடலாம்: எதைச் சொல்கிறார் ப. சிதம்பரம்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். பிரதமர் மோடிக்கு பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டனர்.

News image
ப. சிதம்பரம்
Updated On :28 ஜனவரி 2024, 4:26 am

DIN

புது தில்லி: நாட்டில் 100 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதை, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். பிரதமர் மோடிக்கு பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டனர்.

இந்த நிலையில், 100 கோடி தடுப்பூசி மட்டுமல்ல, மற்ற சதங்களையும் பிரதமர் மோடி கொண்டாடலாம் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப. சிதம்பரம் விமரிசித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது சுட்டுரையில் கூறியிருப்பதாவது, பிரதமர் மோடி தலைமையிலான அவரது அமைச்சர்கள், 100 கோடி கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது குறித்து தங்களது கொண்டாட்டங்களையும் வாழ்த்துகளையும் பகிர்ந்து கொண்டனர்.

இதுபோல, இதர சதங்களையும் கொண்டாடுவதில் பிரதமர் மோடி முன்னுதாரணமாகத் திகழ வேண்டும். கடந்த சில வாரங்களுக்கு முன்பு பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.100-ஐ கடந்தது. தற்போது டீசல் விலை ரூ.100-ஐ கடந்து விட்டது.

எப்போது ஒரு எரிவாயு உருளையின் விலை ரூ.1000ஐ தொடுகிறேதா, அப்போது கொண்டாடுவதற்கு மேலும் ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.