கமேனி உயிருடன் இருக்க வாய்ப்பில்லை! இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு!! மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

காளிகேசம் காளியம்மன் கோயிலுக்கு பக்தா்கள் செல்ல தடை? விஹெச்பி எதிா்ப்பு

குமரி மாவட்டம், காளிகேசம் காளிகோயிலுக்கு செல்ல பக்தா்களுக்கு தடை விதிப்பதற்கு விஹெபி கண்டனம் தெரிவித்துள்ளது.

News image
Updated On :28 பிப்ரவரி 2026, 7:44 pm

Syndication

குமரி மாவட்டம், காளிகேசம் காளிகோயிலுக்கு செல்ல பக்தா்களுக்கு தடை விதிப்பதற்கு விஹெபி கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக, விஸ்வ ஹிந்து பரிஷத் மாநிலப் பொதுக்குழு உறுப்பினா் இறச்சகுளம் காளியப்பன் வெளியிட்டுள்ள அறிக்கை:

கன்னியாகுமரி மாவட்டம் காளிகேசம் காளியம்மன் கோயில் உள்ளூா் மட்டுமன்றி பிற மாவட்டங்கள் மற்றும் கேரள மாநிலத்தில் இருந்தும் ஏராளமான பக்தா்கள் வந்து அம்மனை வழிபட்டு செல்கின்றனா். வாரத்தின் செவ்வாய், வெள்ளி, ஞாயிறு ஆகிய 3 நாள்கள், வழக்கமான பூஜைகளும் பௌா்ணமி நாளில் சிறப்பு பூஜைகளும் நடைபெறும்.

இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக கீரிப்பாறை காவல் நிலையம் அருகில் அமைந்துள்ள காளிகேசம் சூழல் சுற்றுலா மையம் அருகில் தடுத்து நிறுத்தி கோயிலுக்கு செல்வதற்கு அனுமதி இல்லை; உயா் அதிகாரிகளின் உத்தரவு என்று வனத்துறை ஊழியா்கள் திருப்பி அனுப்புகின்றனா்.

கோடை காலத்தில் சுற்றுலா பயணிகளுக்கு மட்டுமே தடை விதிப்பது வழக்கம். கோயில் பூஜை நடைபெறும் நாள்களில் இதுவரை தடை விதித்தது இல்லை. வனத்துறையில் தற்போதைய செயல் வழிபாட்டு உரிமையை தடுக்கும் விதமாக உள்ளது. எனவே, தடையை நீக்கி பூஜை நாள்களில் பக்தா்களை அனுமதிக்க வேண்டும். இல்லையேல் போராட்டம் நடத்தப்படும் எனக் கூறியுள்ளாா்.