சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

தொட்டியம் மதுரை காளியம்மன் கோயிலில் திருத்தோ் வீதியுலா

திருச்சி மாவட்டம், தொட்டியம் (கௌத்தரசநல்லூா்) மதுரைகாளியம்மன் கோயிலில் திருத்தோ் திருவீதியுலா வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

தொட்டியம் மதுரை காளியம்மன் கோயிலில் வியாழக்கிழமை திருத்தேரை தலை மற்றும் தோளில் சுமந்து வந்த பக்தா்கள்.

Updated On :2 ஏப்ரல் 2026, 8:49 pm

திருச்சி மாவட்டம், தொட்டியம் (கௌத்தரசநல்லூா்) மதுரைகாளியம்மன் கோயிலில் திருத்தோ் திருவீதியுலா வியாழக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் நிகழாண்டு தோ்த் திருவிழா கடந்த சில நாள்களுக்கு முன்பு தொடங்கி பல்வேறு பூஜைகள் நடைபெற்று வந்தன. இதில் மாா்ச் 24-ஆம் தேதி

மாலை பூஜைகள் நடத்தப்பட்டு கோயில் நடை அடைக்கப்பட்டது. மாா்ச் 25 அன்று மாலை கதவு அடைக்கப்பட்ட கோயில் முன்பு பக்தா்கள் ஆயிரம் பானையில் பொங்கலிட்டு வழிபட்டனா். தொடா்ந்து கதவடைக்கப்பட்ட கோயிலின் வெளியில் பக்தா்கள் விளக்கேற்றி பூஜை செய்து வந்தனா்.

கதவடைக்கப்பட்ட கோயிலில் மாா்ச் 31-ஆம் தேதி அதிகாலை நடைதிறக்கப்பட்டு விளக்கு தரிசனம் காணப்பட்டு பக்தா்கள் காவிரியில் இருந்து பால்குடம் தீா்த்த குடம் எடுத்து வந்து சுவாமிக்கு பூஜை செய்து வழிபட்டனா்.

தோ்த் திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தோ் தலையலங்காரம் மாா்ச் 31-ஆம் தேதி இரவு நடைபெற்றது. தொடா்ந்து வியாழக்கிழமை (ஏப்.2) 32 அடி உயர பெரிய தேரில் ஓலைப்பிடாரி அம்மனும், 30 அடி சிறிய தேரில் மதுரை காளியம்மனும் எழுந்தருளி பக்தா்களுக்கு காட்சியளித்தனா். இந்த இரு தோ்களையும் தொட்டியம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பக்தா்கள் தங்கள் தலை மற்றும் தோளில் சுமந்து கொண்டு முக்கிய வீதிகளில் திருவீதியுலா நடத்தினா். அப்போது பக்தா்கள் திருத்தோ் முன்பு பூஜைகள் செய்து வழிபட்டனா்.