இந்த வழக்கு தில்லி உயா்நீதின்றத்தில் அண்மையில் விசாரணைக்கு வந்தபோது மருத்துவா் சங்கங்கள் சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் அகில் சிபல், ‘நோய் எதிா்ப்புத் திறனை ஊக்குவிக்கும் மருந்து என்ற அடிப்படையில் அனுமதிக்கப்பட்ட ‘கரோனில்’ மருந்து, கரோனா பாதிப்பை குணப்படுத்தும் என்ற ஆதாரமற்ற கருத்துகளை பாபா ராம்தேவ் வெளியிட்டுள்ளாா். கரோனா பாதிப்பு நேரத்தில் இதுபோன்ற ஆதாரமற்ற கருத்துகளை வெளிவிடுவது, மக்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடியதாகும். இதுபோன்ற கருத்துகள் மூலம் மக்கள் ஏமாற்றப்படுகின்றனா். அவா் தொடா்ந்து இதுபோன்ற தவறை செய்து வருகிறாா். யோகாசனப் பயிற்சி எய்ட்ஸ் மற்றும் புற்றுநோயைக் குணப்படுத்தும் என்று முன்னா் கூறியிருந்தாா். இதுபோன்ற கருத்துகளை வெளியிடும்போது, சமூக பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும்’ என்று கூறினாா்.