புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

மக்களிடமிருந்து பாஜக கொள்ளையடிப்பதாக அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு

ஏழை மக்களிடமிருந்து பாஜக கொள்ளையடிப்பதாக சமாஜ்வாதி கட்சியின் தலைவரும் உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ் குற்றம் சாட்டியுள்ளார்.

News image

அகிலேஷ் யாதவ்

Updated On :26 அக்டோபர் 2021, 10:57 am

DIN

ஏழை மக்களிடமிருந்து பாஜக கொள்ளையடிப்பதாக சமாஜ்வாதி கட்சியின் தலைவரும், உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ் குற்றம் சாட்டியுள்ளார்.

உத்தரப்பிரதேசத்தில் அடுத்த ஆண்டு (2022) சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து அம்மாநிலத்தின் அரசியல் அரங்கில் பரபரப்பு கூடியுள்ளது.

இந்நிலையில் சமாஜ்வாதி கட்சியின் தலைவரும், உத்தரப்பிரதேச மாநில முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ் பாஜக மீது குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார். தனது சுட்டுரைப் பதிவில் அவர், “கடந்த காலங்களில் மக்களின் வங்கிக் கணக்குகளில் இருந்த பணங்களை ’பொய்யில் பூத்த மலர்’ ஒன்று மக்களை ஏமாற்றி கொள்ளையடித்து வருகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், “இன்று மத்தியிலும், உத்தரப்பிரதேசத்திலும் உள்ள பாஜக அரசு மக்களின் அடிப்படை வசதிகளைப் பறிப்பதிலும், அவர்களின் சட்டைப் பைகளில் உள்ள சேமிப்புகளைக் கொள்ளையடிப்பதையுமே முன்னுரிமை காட்டி செயல்பட்டு வருகிறது” என அகிலேஷ் யாதவ் குற்றம் சுமத்தியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.