மேற்கு வங்க மாநிலத்தில் குட்கா, பான் மசாலாவுக்கு தடை விதிப்பதாக மாநில சுகாதாரத்துறை புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து மேற்கு வங்க உணவுப் பாதுகாப்புத்துறை ஆணையர் வெளியிட்டுள்ள உத்தரவில்,
“மேற்கு வங்க மக்களின் நலனை கருத்தில் கொண்டு குட்கா மற்றும் பான் மசாலாவை உற்பத்தி, விற்பனை செய்ய மற்றும் பதுக்கி வைக்க தடை விதிக்கப்படுகிறது.
இந்த பொருள்கள் எந்த பெயரில் சந்தைகளில் விற்கப்பட்டு வந்தாலும் நவம்பர் 7ஆம் தேதி முதல் விற்பனை செய்ய தடை விதிக்கப்படுகிறது. மேலும், இந்த தடையானது அடுத்த ஓராண்டிற்கு அமலில் இருக்கும்.”