நாட்டில் புதிதாக 14,348 பேருக்கு கரோனா; 805 பேர் பலி

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 14,348 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
நாட்டில் புதிதாக 14,348 பேருக்கு கரோனா
நாட்டில் புதிதாக 14,348 பேருக்கு கரோனா
Updated on
1 min read

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 14,348 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

நேற்று முன் தினம் 13,451 பேரும், நேற்று 16,156 பேரும் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று (அக்.28) சற்று குறைந்துதுள்ளது.

இது தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 

நாட்டில் புதிதாக 14,348 கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்தமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,42,46,157-ஆக அதிகரித்துள்ளது. 

புதிதாக 805 பேர் கரோனாவால் உயிரிழந்தனர். இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,57,191-ஆக அதிகரித்துள்ளது.

ஒரு நாளில் மட்டும் 13,198 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் இதுவரை மொத்தமாக்க கரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3,36,27,632-ஆக அதிகரித்துள்ளது.

பல்வேறு மருத்துவமனைகளிலும், வீடுகளிலும்   1,61,334 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  நாடு முழுவதும் இதுவரை 104.82 கோடி தவணை கரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com