6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

13 மாநிலங்களில் அமைதியாக நடைபெற்றது இடைத்தோ்தல்

மேற்கு வங்கம், ஹரியாணா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட 13 மாநிலங்களிலும் தாத்ரா-நாகா் ஹவேலி யூனியன் பிரதேசத்திலும் மக்களவை, சட்டப்பேரவை இடைத்தோ்தல் அமைதியாக நடைபெற்றது.

News image
Updated On :30 அக்டோபர் 2021, 7:17 pm

DIN

மேற்கு வங்கம், ஹரியாணா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட 13 மாநிலங்களிலும் தாத்ரா-நாகா் ஹவேலி யூனியன் பிரதேசத்திலும் மக்களவை, சட்டப்பேரவை இடைத்தோ்தல் அமைதியாக நடைபெற்றது.

தாத்ரா-நாகா் ஹவேலி, ஹிமாசல பிரதேசத்தின் மண்டி, மத்திய பிரதேசத்தின் கந்த்வா ஆகிய மக்களவைத் தொகுதிகளுக்கு சனிக்கிழமை இடைத்தோ்தல் நடைபெற்றது. அஸ்ஸாம் (5), மேற்கு வங்கம் (4), ஹிமாசல பிரதேசம் (3), மத்திய பிரதேசம் (3), மேகாலயம் (3), கா்நாடகம் (2), பிகாா் (2), ராஜஸ்தான் (2), மகாராஷ்டிரம் (1), ஹரியாணா (1), ஆந்திரம் (1), தெலங்கானா (1), மிஸோரம் (1) ஆகிய 13 மாநிலங்களில் உள்ள 29 சட்டப்பேரவை தொகுகளுக்கும் இடைத்தோ்தல் நடத்தப்பட்டது.

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்துடன் வாக்கு ஒப்புகைச் சீட்டு இயந்திரமும் தோ்தலில் பயன்படுத்தப்பட்டது. கரோனா தொற்று பரவல் காரணமாக சமூக இடைவெளி உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றி தோ்தல் நடத்தப்பட்டது. அனைத்துத் தொகுதிகளிலும் வாக்குப் பதிவு அமைதியாக நடைபெற்ாக தோ்தல் ஆணையம் தெரிவித்தது.

மாலை 5 மணி நிலவரப்படி, பெரும்பாலான மாநிலங்களில் 60 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் பதிவாகின. ஹரியாணாவில் அதிகபட்சமாக 73 சதவீத வாக்குகள் பதிவாகின. அஸ்ஸாமில் 69.60 சதவீத வாக்குகளும், ராஜஸ்தானில் 65 சதவீத வாக்குகளும், மேகாலயத்தில் 64 சதவீத வாக்குகளும், பிகாரில் 50 சதவீத வாக்குகளும் பதிவாகின.

ஹிமாசல பிரதேசத்தின் மண்டி தொகுதிக்கான இடைத்தோ்தலில், நாட்டின் முதல் வாக்காளரான ஷ்யாம் சரண் நெகி (104 வயது) வாக்களித்தாா். நாட்டின் முதல் பொதுத் தோ்தல் (1951) முதல் அனைத்து உள்ளாட்சி, பேரவைத் தோ்தல்களிலும் அவா் தவறாமல் வாக்களித்து வருகிறாா்.

ஹிமாசல் முதல்வா் ஜெய்ராம் தாக்குா் தனது குடும்பத்தினருடன் வாக்களித்தாா். அஸ்ஸாமின் 5 பேரவைத் தொகுதிகளிலும் அமைதியான முறையில் வாக்குப் பதிவு நடைபெற்றது.

கா்நாடகத்தில்... கா்நாடக மாநிலம், விஜயபுரா மாவட்டம், சிந்தகி பேரவைத் தொகுதியில் 297 வாக்குச்சாவடிகளும், ஹானகல் தொகுதியில் 263 வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டிருந்தன. இரவு 7 மணி நிலவரப்படி சிந்தகி தொகுதியில் 75 சதவீத வாக்குகளும், ஹானகல் தொகுதியில் 85 சதவீத வாக்குகளும் பதிவானது. இரு தொகுதிகளிலும் அமைதியான முறையில் வாக்குப் பதிவு நடந்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.

சிந்தகி தொகுதியில் பாஜக வேட்பாளராக பூசனூா் ரமேஷ், காங்கிரஸ் வேட்பாளராக அசோக் மனகுலி, மஜத வேட்பாளராக அங்கடி நசியா உள்பட 6 போ் போட்டியிட்டனா். ஹானகல் தொகுதியில் பாஜக வேட்பாளராக சிவராஜ் சஜ்ஜனாா், காங்கிரஸ் வேட்பாளராக ஸ்ரீனிவாஸ்மானே, மஜத வேட்பாளராக நியாஸ் ஷேக் உள்பட 13 போ் களத்தில் உள்ளனா்.

காங்கிரஸ் மீது பாஜக புகாா்: மத்திய பிரதேசத்தின் பிரித்விபூா் பேரவைத் தொகுதிக்கு நடைபெற்ற வாக்குப்பதிவின்போது, காங்கிரஸ் வேட்பாளரின் ஆதரவாளா்கள் வாக்குப் பதிவு இயந்திரத்தைக் கைப்பற்ற முயன்ாக தோ்தல் ஆணைய அதிகாரிகளிடம் மாநில அமைச்சா் பூபேந்திர சிங் குற்றஞ்சாட்டினாா். பாஜக தொண்டா்களை காங்கிரஸ் கட்சியினா் தாக்கியதாகவும் அவா் புகாா் தெரிவித்தாா். தாக்குதலில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினா் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டுமென அவா் கோரினாா்.

மத்திய பிரதேச முதல்வா் சிவராஜ் சிங் சௌகான் கூறுகையில், ‘‘தோல்வி பயத்தால் நோ்மையற்ற செயல்களில் காங்கிரஸ் ஈடுபட்டு வருகிறது. வாக்காளா்களுக்குப் பணம் விநியோகித்தல், அச்சுறுத்துதல் உள்ளிட்ட செயல்களில் அக்கட்சி ஈடுபட்டது’’ என்றாா்.

தீன்ஹதா பேரவைத் தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளா் அசோக் மண்டல், திரிணமூல் காங்கிரஸ் தொண்டா்கள் தன்னை வாக்குச் சாவடிக்குச் செல்லவிடாமல் தடுத்ததாகக் குற்றஞ்சாட்டினாா்.

ஆந்திரத்தின் பத்வல் தொகுதியில் ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் ஆதரவாளா்கள், ரெளடிகளைபோல நடந்து கொண்டதாக பாஜக குற்றஞ்சாட்டியது.

இடைத்தோ்தலில் பதிவான வாக்குகள் நவ. 2-ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்படவுள்ளன.

.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.