கோவா சட்டப்பேரவைத் தேர்தலில் மாநிலக் கட்சிகள் ஓரணியில் நின்று பாஜகவை எதிர்க்க வேண்டும் என மேற்குவங்க முதல்வரும், திரிணமூல் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
கோவாவில் அடுத்த ஆண்டு (2022) சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. மொத்தம் 40 இடங்களுக்கு நடைபெற உள்ள இந்தத் தேர்தலில் வெற்றி பெற பாஜகவும், காங்கிரஸும் கடுமையாக மோதி வருகின்றன.
இதையும் படிக்க | முல்லைப்பெரியாறு அணை தமிழத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது: துரைமுருகன்
இந்நிலையில் கோவா முற்போக்கு கட்சியின் தலைவர் விஜய் சர்தேசாயை மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி சனிக்கிழமை சந்தித்து பேசினார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மம்தா பானர்ஜி, “பாஜகவை எதிர்ப்பதில் இணைந்து செயல்படுவது தொடர்பாக ஆலோசனை நடத்தினோம். சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்குகள் பிரிவதை தவிர்க்க வேண்டும். அதற்காக மாநிலக் கட்சிகள் இணைந்து பாஜகவை எதிர்க்க வேண்டும்” என மம்தா பானர்ஜி தெரிவித்தார்.
சர்தேசாய் பேசும்போது, “மம்தா பானர்ஜி பிராந்திய அரசியலின் பெருமைமிக்கவர். பாஜகவிற்கு எதிராக மாநிலக் கட்சிகள் இணைந்து தேர்தலை சந்திப்பது தொடர்பான அவரது அழைப்பை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்” எனத் தெரிவித்தார்.
கோவா சட்டப்பேரவையில் பாஜகவிற்கு 17 சட்டப்பேரவை உறுப்பினர்களும், காங்கிரஸுக்கு 15 உறுப்பினர்களும் உள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விஜய்தான் தமிழ்நாட்டை ஆள்வார்; இலங்கை, நேபாளம் போல கருத்துக்கணிப்புகள் பொய்யாகும்! - செங்கோட்டையன்

ரயில்வே நிதிக்கழகத்தில் உதவி மேலாளர் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் விண்ணப்பங்கள் வரவேற்பு!

பொதுத் துறை வங்கியில் பாதுகாப்பு மேலாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

பவர்கிரிட் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


