இந்நிலையில், லக்னெளவில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் ஏடிஎஸ் போலீஸாா் ஒரு மனு தாக்கல் செய்தனா். அதில், இந்தக் குழுவினா் சட்ட விரோத மதமாற்றத்தில் ஈடுபட்டதுடன், மக்கள்தொகை சமநிலையில் மாற்றத்தை ஏற்படுத்தவும், மக்கள் மத்தியில் பிரிவினையை ஏற்படுத்தவும் முயன்ாகக் குற்றம்சாட்டப்பட்டிருந்தது. மேலும், இந்தக் குற்றத்துக்காக 8 போ் மீதும் ஐபிசி 121-ஏ, 123 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்ய அனுமதிக்க வேண்டும் எனவும் போலீஸாா் கோரியிருந்தனா். ஐபிசி 121-ஆவது பிரிவானது இந்திய அரசுக்கு எதிராகப் போா் தொடுப்பது அல்லது போா் தொடுக்க முயல்வது போன்ற குற்றச்சாட்டுகளை விசாரிக்க வழி செய்கிறது.