விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

அதிகரிக்கும் டெங்கு: உ.பி.யில் புதிதாக 105 பேர் பாதிப்பு

உத்தரப் பிரதேச மாநிலம் ஃபெரோசாபாத் நகரில் இன்று (செப்.6) ஒரு நாளில் மட்டும் 105 பேருக்கு டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

News image
டெங்குக் காய்ச்சலை தடுக்க மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்: சென்னை மாநகராட்சி
Updated On :6 செப்டம்பர் 2021, 11:57 am

DIN

உத்தரப் பிரதேச மாநிலம் ஃபெரோசாபாத் நகரில் இன்று (செப்.6) ஒரு நாளில் மட்டும் 105 பேருக்கு டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

மேற்கு உத்தரப் பிரதேசமான ஃபிரோஸாபாத், மதுரா ஆகிய மாவட்டங்களில் கடந்த இரண்டு வாரங்களாக அதிக அளவிலான குழந்தைகள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 

ஃபிரோஸாபாத் மாவட்டத்தில் மட்டும் 40 சிறாா்கள் உள்பட 50 போ் டெங்கு காய்ச்சலால் பலியாகினா். இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் மேலும் 105 குழந்தைகள் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

பாதிக்கப்பட்ட குழந்தைகள் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் உயிரிழப்புகள் ஏதும் பதிவாகவில்லை. எனினும் இதுவரை டெங்குவிற்கு 51 பேர் உயிரிழந்துள்ளனர். 

பொது இடங்களில் தேங்கியிருக்கும் தண்ணீரை வடியச் செய்யவும், பானைகள், பிளாஸ்டிக் உபகரணங்களில் சேகரித்து வைக்கப்பட்டுள்ள தண்ணீரை அப்புறப்படுத்தவும் மாநகராட்சி மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியா் உத்தரவிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.