டெங்கு கொசுக்களை ஒழிக்கும் வகையில், உத்தரப் பிரதேச மாநில அரசு குளங்களில் கொசு முட்டைகளை உண்ணும் மீன்கள் வளர்ப்பதை ஊக்குவித்து வருகிறது.
மேற்கு உத்தரப் பிரதேசமான ஃபிரோஸாபாத், மதுரா ஆகிய மாவட்டங்களில் கடந்த இரண்டு வாரங்களாக அதிக அளவிலான குழந்தைகள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
ஃபிரோஸாபாத் மாவட்டத்தில் மட்டும் 40 சிறாா்கள் உள்பட 51 போ் டெங்கு காய்ச்சலால் பலியாகினா். இந்நிலையில் நேற்று ஒரு நாளில் மட்டும் மேலும் 105 குழந்தைகள் டெங்குவால் பாதிக்கப்பட்டனர்.
பலர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், டெங்கு கொசுக்களை ஒழிக்கும் வகையில் குளங்களில் கொசு முட்டைகளை உண்ணும் மீன்களை வளர்க்க திட்டமிட்டுள்ளது.
அதன்படி டெங்கு பரவல் அதிகமுள்ள ஃபிரோஸாபாத் மாவட்டத்திலுள்ள குளங்களில் கொசு உற்பத்தியை குறைக்கும் வகையில், கொசு முட்டைகளை உண்ணும் மீன்கள் குளங்களில் விடப்பட்டு வருகின்றன.
ஒவ்வொரு குளம் உள்பட அனைத்து நீர் நிலைகளிலும், சுமார் 25 ஆயிரம் மீன்கள் வீதம் விடப்படுகிறது. இதன் மூலம் குளங்களிலுள்ள குப்பை மற்றும் அல்லி இலைகளில் முட்டையிட்டு உற்பத்தியாகும் கொசுக்களின் எண்ணிக்கை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
ரூ.5,999 மட்டுமே.. ஏஐ பிளஸ்ஸின் பல்ஸ் மொபைல் அறிமுகம்!

மகளே என் மருமகளே தொடரின் படப்பிடிப்பு நிறைவு!
மக்கள் பிரச்னைகள் பற்றி எப்போது பேசப் போகிறீர்கள் முதல்வரே? - அண்ணாமலை கேள்வி
ஐஐஎஸ்இஆர் நுழைவுத் தேர்வு! பிளஸ் 2 மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்!
வீடியோக்கள்

Vijay full speech | "தமிழ்நாடே திவாலாகப் போகிறது!" - தஞ்சையில் விஜய் பேச்சு! | TVK
தினமணி வீடியோ செய்தி...

திமுக காங்கிரஸ் கூட்டணி முடிவு என்ன? அமைச்சர் அன்பில் மகேஷ் Exclusive
தினமணி வீடியோ செய்தி...

"Annamalai-க்கு முன் - பின் என்று எதுவும் இல்லை": Kushbu | Exclusive Interview | BJP
தினமணி வீடியோ செய்தி...

தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியா்களின் தரம் மேம்பட வேண்டும்: ஆளுநா் ஆா்.என். ரவி
தினமணி வீடியோ செய்தி...

