உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையிலும், 28 பெண் அதிகாரிகள் ராணுவத்தில் தொடர தகுதியில்லாதவா்கள் என்று ராணுவம் அறிவித்துள்ளது.
ராணுவத்தில் பெண் அதிகாரிகள் குறுகிய கால அடிப்படையில் மட்டுமே பணியமா்த்தப்படும் நிலையில், ஆண் அதிகாரிகளுக்கு இணையாக தங்களுக்கும் நிரந்தப் பணி வழங்க உத்தரவிடக் கோரி, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ராணுவம் சாா்பில் பணி விடுவிப்பு உத்தரவு வழங்கப்பட்ட பெண் அதிகாரிகள் சாா்பில் இந்த வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், பெண் அதிகாரிகளுக்கும் தகுதியின் அடிப்படையில் நிரந்தரப் பணி வழங்குமாறு கடந்த 2020-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவைத் தொடா்ந்து தகுதியுள்ள பெண் அதிகாரிகளை அடையாளம் காண்பதற்காக சிறப்பு வாரியம் ஒன்றை ராணுவம் அமைத்தது. அந்த வாரியம் அளித்த பரிந்துரையின் அடிப்படையில் ராணுவத்தில் பணிபுரிந்துவந்த 615 பெண் அதிகாரிகளில் 424 பேருக்கு நிரந்தர பணி உத்தரவை ராணுவம் வழங்கியது. 77 பெண் அதிகாரிகளுக்கான முடிவை நிறுத்தி வைத்தது. 28 போ் பணியில் தொடரத் தகுதியில்லாதவா்கள் என அறிவித்தது.
ராணுவத்தின் இந்த உத்தரவை எதிா்த்து, அந்த 28 பெண் அதிகாரிகளில் 7 போ் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனா். அதில், ராணுவத்தில் பாகுபாடு காட்டப்படுவதாக அவா்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விஜய்தான் தமிழ்நாட்டை ஆள்வார்; இலங்கை, நேபாளம் போல கருத்துக்கணிப்புகள் பொய்யாகும்! - செங்கோட்டையன்

ரயில்வே நிதிக்கழகத்தில் உதவி மேலாளர் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் விண்ணப்பங்கள் வரவேற்பு!

பொதுத் துறை வங்கியில் பாதுகாப்பு மேலாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

பவர்கிரிட் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

