
தில்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 36 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தில்லி கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகள் அடங்கிய செய்திக் குறிப்பு வெளியாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 76,883 பரிசோதனைகள் நடத்தப்பட்டன. இதில் 36 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதால் தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்படும் விகிதம் 0.05 சதவிகிதமாகப் பதிவாகியுள்ளது.
52 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஒருவர்கூட நோய்த் தொற்றால் பலியாகவில்லை.
இதைத் தொடர்ந்து, தில்லியில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 14,38,154 ஆக உயர்ந்துள்ளது. இதில் 14,12,672 பேர் குணமடைந்துள்ளனர். 25,083 பேர் பலியாகியுள்ளனர்.
இன்றைய நிலவரப்படி 399 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.