பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

தில்லிக்கு இன்று கனமழை எச்சரிக்கை

தில்லியின் பல்வேறு பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை இன்று காலை முதல் பெய்துவருகிறது.

News image
கோப்புப்படம்
Updated On :16 செப்டம்பர் 2021, 5:00 am

DIN

தில்லிக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், பலத்த காற்றுடன் கூடிய கனமழை இன்று பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

கடந்த 46 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு முதல்முறையாக 1,000 மிமீ மழை பெய்தது. செப்டம்பர் 11ஆம் தேதி, திடீரென பெய்த கனமழையால் தில்லி விமான நிலையம் மற்றும் பல பகுதிகளில் வெள்ளம் போல் தண்ணீர் தேங்கியது.

இந்நிலையில், தில்லியில் இன்று காலை பல்வேறு பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்துவருகிறது. ஈரப்பதம் சுமார் 92 சதவீதமாக பதிவாகியுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

இந்த மழைக்காலத்தில் இதுவரை தலைநகரில் 1,146.4 மிமீ ஆண்டு மழை பெய்துள்ளது, இது 46 ஆண்டுகளில் இல்லாத அதிகபட்சம். நகரத்தில் சனிக்கிழமை 117.9 மிமீ மழை பதிவானது. இதன் காரணமாக, தில்லி விமான நிலையத்தில் கடுமையான நீர் தேக்கம் ஏற்பட்டது. 

முக்கிய சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகனங்கள் வெள்ளத்தில் சிக்கியது. டெல்லிக்கு செல்லும் நான்கு உள்நாட்டு விமானங்கள் மற்றும் ஒரு சர்வதேச விமானம என ஐந்து விமானங்கள் அண்டை நகரங்களுக்கு திருப்பி விடப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.