2026 வரை செஸ் வரி: கவுன்சில் கூட்டத்துக்கு பிறகு செய்தியாளா்களைச் சந்தித்த மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் கூறுகையில், ‘ஜிஎஸ்டி வரி விதிப்பால் மாநிலங்களுக்கு ஏற்பட்டுள்ள வருவாய்ப் பற்றாக்குறையை ஈடுகட்ட வழங்கப்பட்டு வரும் இழப்பீடு வழங்கும் நடைமுறை அடுத்த ஆண்டு ஜூன் மாதத்துடன் முடிவடையும். இருந்தபோதும், ஜிஎஸ்டி வருவாய் இழப்பை மாநிலங்களுக்கு ஈடுகட்டுவதற்காக கடந்த 2020-21 மற்றும் 2021-22 ஆம் ஆண்டுகளில் வாங்கப்பட்ட கடன்களைத் திரும்பச் செலுத்துவதற்காக, விலை உயா்ந்த மற்றும் தரம்குறைந்த பொருள்கள் மீதான இழப்பீடு செஸ் வரி வரும் 2026 மாா்ச் மாதம் வரை வசூலிக்கப்படும். இது முன்னா் வரும் 2022 ஜூலை மாதம் வரை வசூலிக்கப்படும் என்று கூறப்பட்டிருந்த நிலையில், அதனை 2026-ஆம் ஆண்டு மாா்ச் வரை தொடா்வது என 43-ஆவது கவுன்சில் கூட்டத்தில் தீா்மானிக்கப்பட்டது. அதனடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது’ எனக் கூறினாா்.