மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

"எல்லையில் போர்ச் சூழல்'

இந்தியா தனது எல்லைப் பகுதிகளில் போர்ச்சூழலை சந்தித்து வருவதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்தார்.

News image
Updated On :21 செப்டம்பர் 2021, 10:14 pm

DIN

இந்தியா தனது எல்லைப் பகுதிகளில் போர்ச்சூழலை சந்தித்து வருவதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்தார்.
 லடாக், உத்தரகண்ட், அருணாசல பிரதேசம் ஆகிய நமது எல்லையையொட்டிய பகுதிகளில் சீனா 10 புதிய ராணுவத் தளங்களை அமைத்து வருவதாக ஊடகம் ஒன்றில் செய்தி வெளியாகியுள்ளது. இது தவிர இந்திய எல்லையை ஒட்டிய பகுதிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை சீனா மேம்படுத்தி வருவதாகவும் அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.
 இந்தச் செய்தியை தனது சுட்டுரைப் பக்கத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பகிர்ந்துள்ளார். இது தொடர்பாக அவர் கருத்து தெரிவிக்கையில் "நமது எல்லைப் பகுதிகளில் போர்ச்சூழலை நாம் சந்தித்து வருகிறோம்' என்று குறிப்பிட்டுள்ளார்.
 இந்திய-சீன ராணுவத்தினர் இடையே பாங்காங் ஏரிப் பகுதியில் கடந்த ஆண்டு மே 5-ஆம் தேதி மோதல் வெடித்தது. இதில் இரு தரப்பிலும் உயிரிழப்பு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து எல்லையில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை மத்திய அரசு கையாளும் விதத்தை ராகுல் காந்தி தொடர்ந்து விமர்சித்து வருகிறார். இரு தரப்பும் அப்பகுதியில் படைக்குவிப்பை படிப்படியாக அதிகரித்தன. எனினும், ராணுவம் மற்றும் தூதரக ரீதியிலான பேச்சுவார்த்தைக்குப் பிறகு கோக்ரா பகுதியில் இருந்து இரு தரப்பும் கடந்த மாதம் படைகளை வாபஸ் பெற்றன. தற்போது பிரச்னைக்குரிய பகுதியில் இரு நாடுகளும் 50,000 முதல் 60,000 வீரர்கள் வரை குவித்துள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.